மனசாட்சிக்கோர் கேள்வி?

கவிதைகள் (All)

அடிமையாய் இருந்த இந்தியா
ஆங்கிலேயரை விரட்டியடித்த
இனிய நாள்
ஆகஸ்ட் -15!

பிரித்தாண்டவர்கள்
வெளியேறிவிட்டார்கள்
பிரிவினைகளையும்
பிரச்சினைகளையும்
விட்டுவிட்டு!

பேணப்பட வேண்டியது
போற்றப்பட வேண்டியது
மதிக்கப்பட வேண்டியது
காக்கப்பட வேண்டியது
சுதந்திரம்!

சுதந்திர இந்தியாவை
என்செய்து கொண்டிருக்கின்றோம்-நாம்?
இனிய நன்நாளில்
நம்மனைவரின் மனசாட்சிக்கும்
ஓர் கேள்வி?

_இமாம்.கவுஸ் மொய்தீன்.

அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *