உலகப் பொருளாதாரச் சிக்கலுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு

இன்று ஒட்டு மொத்த உலகமுமே பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிக்கின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு , சம்பளக் குறைப்பு என்று தடாலடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இதனால் – வேலையை இழந்தவர்களும், சம்பளம் குறைக்கப் பட்டவர்களும் பல்வேறு பொருளாதாரப் பிரச்னைகளுக்கும், மன நலப்பிரச்னைகளுக்கும் ஆளாகிறார்கள். சம்பளம் வருகிறதே என்று கடன் வாங்கி சொத்துக்களைச் சேர்த்தவர்கள், கடனை அடைக்க முடியாமல் திணருகிறார்கள். தவணை முறையில் சொத்துக்கள் வாங்கியவர்களுக்கும் இதே நிலை தான். வேலை […]

Read More

கருத்தரிக்கும் முன் ஆலோசனை.

நீங்கள் சமீபத்தில் திருமணம் ஆனவரா? அல்லது சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் கட்டாயம் இந்த ஆலோசனை பெற வேண்டும். எல்லோரும் குழந்தைகளை படிக்க வைக்க திட்டமிடுகிறார்கள் – வீடு கட்ட திட்டமிடுகிறார்கள்-கல்யாணம் செய்ய திட்டமிடுறார்கள்- எத்தனை பேர் குழந்தை பெறுவதை திட்டமிடுகிறார்கள்? நான் ஆரோக்கியமாக இருக்கின்றேனா ? குழந்தை பெற்றுக்கொள்ள எனக்கு சரியான வயதா? எனது இரத்த அளவு, சர்க்கரை அளவு, எடை சரியாக இருக்கிறதா? என்னுடைய நிதி நிலைமை , குடும்ப சூழ்நிலை […]

Read More

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது […]

Read More

எளிய மருத்துவக்குறிப்புகள்

1) பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை மேனி இலையறையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும். 2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும். 3) வயிற்றுவலி போக்கும் நறுவலி நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும். 4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று […]

Read More

சீரகத்தின் மருத்துவகுணங்கள்

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர். * சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். * மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் […]

Read More

இளமையுடன் இருக்க ரகசியம் தினமும் 50 கிராம் வேர்க்கடலை

நியூயார்க்: தினமும் ஐம்பது கிராம் வேகவைத்த வேர்க் கடலைச் சாப்பிட்டால், இளமையாக இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.நியூயார்க், எல்பாசா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உணவுப் பழக்கம் தொடர்பாக ஓர் ஆய்வு நடத்தினர். அதில் பல்வேறு உணவுப் பொருட்களில் உள்ள பயன்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டது. வேகவைத்த வேர்க்கடலையில், விஷக்கிருமிகளை கொல்லும் ஆற்றல் அதிகமாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர். அன்றாடம் சாப்பிடும் உணவு மற்றும் காய்கறிகள் மூலமாகவும் உயிர்க்கொல்லி நோய்கள் ஏற்படுகின்றன. இது போன்ற விஷக்கிருமிகளோடு போராடும் […]

Read More

புகை பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள் ஏராளமானவை உண்டு. அந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கிறது முடி கொட்டும் பிரச்சினை.

புகை பிடிக்கும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நபர்களை ஆய்வு செய்து பார்த்ததில், அதிகம் புகைபிடிக்கும் நபர்களுக்கு முடி கொட்டுதலுக்கு காரணமான நோய் ஏற்படும் என்று கண்டறிந்துள்ளனர். இதனால் வயதாக வயதாக தலையில் முடி சுத்தமாக இல்லாது போகும். எனவே முடி கொட்டுவதை நிறுத்தி அழகாகவே இருக்க வேண்டுமெனில் புகை பிடிக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்

Read More

தர்பூசணியை பிழிந்தால் ஓர் சுவையான ஜூஸ் மட்டுமே கிடைக்கும் என்று…

தர்பூசணியை பிழிந்தால் ஓர் சுவையான ஜூஸ் மட்டுமே கிடைக்கும் என்று நினைத்து கொண்டிருந்தவர் எல்லாம், ‘ஐயையோ, இவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சே…!” என்று அங்கலாய்க்கும் தகவல் இது. அதாவது, தர்பூசணி பழம் ஓர் இயற்கையான ‘வயாக்ரா’ என்பது தான். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்ற இந்தியர், இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் தெரியவந்துள்ளன. அதன்படி, தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ – […]

Read More

பருப்பு வகைகளும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ள உணவை சாப்பிட்டு வந்தால்…

பருப்பு வகைகளும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ள உணவை சாப்பிட்டு வந்தால், வயிறு சம்பந்தமான நோய்கள் பெரும்பாலும் குறையும். ஆரோக்கியமான வாழ்வை வாழலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம், ஆய்வு செய்து இந்த உண்மையை கண்டறிந்துள்ளனர். அதில் அதிகம் பருப்பு வகைகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தவர்களுக்கு, கணையம், இதயம் தொடர்பான நோய்களும், நீரிழிவு நோயும் உண்டாகும் ஆபத்துகள் குறைந்திருப்பதை கண்டறிந்துள்ளனர். எனவே தினசரி உணவில் பாதிக்குபாதி பருப்பு வகைகள் அடங்கியிருப்பது நல்லது.

Read More

உடலின் பாதுகாப்புத்தன்மையின்மையால் நோய்க் குள்ளாகி ஆஸ்பத்திரிக்கு அலைவதை விட …

உடலின் பாதுகாப்புத்தன்மையின்மையால் நோய்க் குள்ளாகி ஆஸ்பத்திரிக்கு அலைவதை விட நாம் உண்ணும் உணவுகளே பிரதான நோய் தடுக்கும் ஆற்றலைக் கொடுக்கிறது. அரைக்கீரையின் பயன்களும் அப்படித்தான்/ நோய் தீர்க்கும் அரும் மருந்தாக உதவுகிறது. அரைக்கீரை அதிக அளவிலும்/ தமிழக மக்கள் அதிகமாக பயன்படுத்தும் கீரையுமாகும். அரைக்கீரை இதன் விதை இரண்டுமே உணவாகப் பயன்படுகின்றன. இந்த கீரையில் அற்புதம் தரும் பயன்கள் உள்ளன. இதில் வைட்டமின்களும்/ தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. பல்வேறு பக்குவங்களில் இக்கீரையைச் சமைத்து சாப்பிடலாம். […]

Read More