பிரிவு உபசாரம்!!

கவிதைகள் (All)

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

வாழ்க்கைப் பயணத்தில்
அசாதரணமாக
அளிக்கப்படும்
கௌரவம்!

கொடுப்பவர்கட்கு அது
தொடர் பயணம்
பெறுபவர்க்கோ
பயணத்தில் மாற்றம்!

சேவைக்கும் திறமைக்கும்
நற்பண்புகட்கும்
அளிக்கப்படும்
மரியாதை!

ஒருவரின்
நடத்தை சிறப்பு
முக்கியத்துவதின்
அளவு கோல்!

விலக்கும் தூரம்
நெருங்க வைக்கும்
அன்பும் பாசமும்
நட்பும்!

மொத்தத்தில்
மனம் ஒப்பாமலேயே
கொடுக்கப்படும்
பிரியா விடை!

Last update : 24-10-2008 15:07

நன்றி: அதிகாலை.
அன்புடன்,
இமாம்.
http://thamizheamude.blogspot.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *