வாழ்க்கை

கவிதைகள் (All)

வாழ்க்கை
உண்டு
களித்து
உலுத்து போவது
உண்மை என்ற போதிலும்

கொண்டு வந்ததும்
கொண்டு போவதும்
ஒன்றுமில்லை என்ற போதிலும்

வாழ்கை பல நூறுஆண்டுகள்
இங்கு இல்லை
என்ற போதிலும்
எத்தனை ஆசை
இந்த வெற்று வாழ்கையிலே

உண்டு சுவைக்கவும்
கண்டு மகிழவும்
கேட்டு இன்பம்
கோடி பெற கடலளவு உண்டு
என்ற போதிலும்

அத்தனையும் கொண்டு மகிழ்திட
மட்டு ஒன்று உண்டு என்று
மனம் அறிந்த போதிலும்
எத்தனை ஆசை இந்த
வெற்று வாழ்கையிலே

ஆண்டியாய்
அரை வயிராய்
வாழ்ந்து மறைந்தவர்
கோடி

கோடி கோடியாய் வைத்து
மாடி மாடியாய் கட்டி
வாழ்ந்து மறைந்தவர்
கோடி

தேடி தேடி பார்பினும்
தேவையில்லா
மனிதன் இல்லா
உலகத்திலே
வாழத்தான் எத்தனை ஆசை
எத்தனை ஆசை

Rajakamal
rajakamal.blogspot.com
rajakml.@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *