மெளனங்கள்

கவிதைகள் (All)

முட்டைகளை ஒத்திருக்கின்றன
மெளனங்கள்.

வெண்மையாலான ஓடு
வெளித்தெரியும்
சமாதானமாகவோ…
சம்மதமாகவோ…!

உள்ளிருப்பு தெரிவதில்லை
உடையும் வரை!

பொறுமை காத்து
பிரசவிக்கச் செய்யலாம்
புதிய பிறப்பை!

எனினும்..

உடைக்கப்பட்டே
உட்கொள்ளப்படுகின்றன
பெரும்பாலும்!

இன்னமும்
உடைக்கப்பட முடியாமலிருக்கும்
ஒற்றை முட்டையில்
உறைந்திருக்கலாம்
ஓர் மகா நிசப்தம்.

(உயிரோசை மின்னிதழில் வெளியாகியிருக்கிறது).


H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com
www.mypno.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *