பொங்கல் வாழ்த்து

கவிதைகள் (All)

சோற்றிலே நாம் கை வைத்திட-
சேற்றிலே கால் வைத்து;
ஏற்றமுடன் ஏர் பிடித்து;
ஆற்றலுடன் தான் உழைத்திடும்
போற்றுதலுக்குரிய உழவர்களின்
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க
இல்லத்தில் செல்வம் பொங்க
இனிவரும் காலமெல்லாம்
இனிய கரும்பாய் வாழ்வில் சுவை தங்க
சக்கரைப் பொங்கலாய்
எக்கணமும் இன்பமே பொங்கட்டும்………………..!!!!!!!!!!!!

கவிதைப் பொங்கல் சமைத்து
கவியன்பன் கலாம் தருகின்றேன் வாழ்த்து.

kavianban kalam, Adirampattinam
00971-50-8351499
shaickkalam@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *