பெருநாள்…
பெருநாள்… திங்களொன்று நோன்பு நோற்று தராவீஹ் தஸ்பீஹ் முறையாய்செய்து இங்கிதமாய் சுற்றத்தொடு சேர்ந்தமர்ந்து இனிதாய் இப்தார் செய்திட்டோமே! அதிகாலை துயிலெழுந்து தொழுது அன்பாய்க்கூடி ஸஹர்செய்து – பின் கதிமிகதந்திடும் ஸுப்ஹும் தொழுது குர்ஆன் ஓதிட்டோமே இத்திங்களிதில்! செய்த தவறுக்காய் தேம்பியழுது –நம் தேகமெங்கும் சேர்ந்திட்ட பவக்கரைநீங்கிட பெய்யும் மழையாய் அருள்தனைவேண்டி படைத்தவனிடம் ஏந்தினோமே…