நாளிதழ்
உன்னை காதலுடன் கரம்பற்றுவதில் அப்பாவிற்கும் அவரின் அன்புச்சகோதரர்தளுக்கும் அதிகாலையிலேயே சண்டைமூட்டுவாய்! கட்டியவளின் கூற்றுகளை காதில் வாங்காமல் காபியுடன் கண்ணிமைக்காமல இருக்கும் அப்பாவுடன் கைகோர்த்திருப்பாய்! விண்ணைத்தொட்ட செய்தியிலிருந்து மண்ணைதொட்ட செய்திவரை விவரமாக விமர்சித்தபின் வெளியுலகிற்கு வருவாய்! மாதிரிவினாவிடையை வாரந்தோறும் வாஞ்சையாய் வாங்கித்தருவாய்! யார்?எங்கே?ஏன்?எப்போது?எப்படி?என்ன? என்று எல்லா கேள்விகளுக்கும் கேள்வியின் நாயகியாவாய்!…