ஜூலை 31, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஜூலை 31, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிஸ் சார்பில் ஜூலை 31, சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஜூம் காணொலி வழியாக நடக்கிறது. இந் த நிகழ்ச்சிக்கு முஹிப்புல் உலமா அல்ஹாஜ் முஹம்மது மஹ்ரூப் தலைமை வகிக்கிறார். சமூக ஆர்வலர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதுகிறார். இலங்கை, அக்கரைப்பற்று, அபூபக்கர் சித்திக் இஸ்லாமியக் கல்லூரியில் பயின்ற மௌலவி சுபையிர் அஹில் முஹம்மத் சித்திக்கீ ”இஸ்லாத்தில் இளைஞர்களின் பங்களிப்பு” என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். மேலும் அல்ஹாஜ் முஹம்மது மஹ்ரூப் எழுதிய பாடல் ஒன்றும் வெளியிடப்பட இருக்கிறது. இது குறித்த விளக்கவுரையை கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் நிகழ்த்த இருக்கிறார். ஜூம் ஐடி எண் : 318…