-
News
-
September 16, 2014
ஈமானின் கிளைகள்!!!! 1) அல்லாஹ்வை நம்புவது. 2) இறைத்தூதர்களை நம்புவது. 3) மலக்குமார்களை நம்புவது. 4) அல்குர்ஆனையும் ஏனைய இறைவேதங்களையும் நம்புவது. 5) நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டதே! என்ற விதியைநம்புவது. 6) உலக அழிவு நாளை நம்புவது. 7) மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதை நம்புவது. 8) மரணத்திற்குப் பின் எழுப்பப்பட்டு ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்படும் மஹ்ஷரைநம்புவது. 9) முஃமின் செல்லுமிடம் சொர்க்கம் என நம்புவது. 10) அல்லாஹ்வை நேசிப்பது. 11) அல்லாஹ்வுக்குப் பயப்படுவது. 12) அல்லாஹ்வின் அருளில் ஆதரவு வைப்பது. 13) அல்லாஹ்வின் மிதே தவக்குல் வைப்பது. 14) நபி(ஸல்) அவர்களை நேசிப்பது. 15) நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவது. 16) இறைநிராகரிப்பை விட நெருப்பில் எறியப்படுவதே மேல்! எனும் அளவிற்குஇஸ்லாத்தை நேசிப்பது. 17) அல்லாஹ்வைப் பற்றியும் அவனது மார்க்கததைப் பற்றியுமுள்ள கல்வியைகற்பது. 18) கல்வியைப் பரப்புவது. 19) அல்குர்ஆனை கற்பது மற்றும் கற்றுக் கொடுப்பதன் மூலம் அதனைகண்ணியப்படுத்துவது. 20) தூய்மையாக இருப்பது. 21) ஐவேளை-கடமையான -தொழுகைகளை நிறைவேற்றுவது. 22) ஜகாத் கொடுப்பது. 23) ரமலான் மாதம் நோன்பு நோற்பது. 24) இஃதிகாஃப் இருப்பது. 25) ஹஜ் செய்வது. 26) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவது. 27) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவதற்காக ஆயத்தமாவது, தயார்நிலையில் இருப்பது. 28) அறப்போரில்- எதிரியை சந்திக்கும் போது உறுதியாக நிற்பது, புறமுதுகிட்டுஓடாமலிருப்பது. 29) முஸ்லிம்களின் ஆட்சித் தலைவருக்கு போரில் கனீமத்தாகக் கிடைத்தபொருட்களில் ஐந்தில் ஒரு பங்கைக் கொடுப்பது. 30) அல்லாஹ்விற்காக அடிமையை உரிமை விடுவது. 31) குற்றவாளி அதற்குரிய பரிகாரங்களை நிறைவேற்றுவது. (1. கொலை, 2. லிஹார், 3. ரமலான் நோன்பின் போது உடலுறவு கொள்ளல் போன்றவற்றின் பரிகாரங்கள்)…