1. Home
  2. காரைக்குடி ஃபாத்திமா ஹமீத்

Tag: காரைக்குடி ஃபாத்திமா ஹமீத்

ஈரம்

  என் மழலையின் ஈரம், மணல்வீடு கட்டியதை மழைவந்து கரைத்தபோது அமாவாசையிலும் நிலவுகாண அம்மாவிடம் அடம்பிடித்தபோது !   என் நினைவுகளின் ஈரம், உடன்படித்த என்தோழி ஊருணியில் உயிர்விட்டபோது பாசமுள்ள என் பெரியம்மா மாரடைப்பில் மரணித்தபோது !   என் உணர்வுகளின் ஈரம், சுனாமிகள் மக்களைச் சுருட்டிச் சென்றபோது,…

கணவன்

  ’கண்’ அவன் என்றதால்தான் கணவன் என்று பெயர்பெற்றாயோ? என்னமாயம் செய்தாயோ? ஈன்றெடுத்தோரை மறந்தேன் !   உண்டுகளித்த உடன்பிறந்தோரை நான்மறந்து போனேன் ! சேர்ந்து படித்த சிநேகிதிகளையும் துறந்தேன் !   கடமை அழைத்ததால் – உன் உடைமையான என்னை தனிமையில் விட்டுவிட்டு அயல்நாடு வந்துவிட்டாய் !…

நிழலும் நிஜமும்

  என்ன இந்த வாழ்க்கையென்று அலுத்துக் கொள்ளும் வேளைகளில் நிழலான சில காட்சிகள் என்கண் முன்னால் !   அடுத்தவீட்டு வாசலில் அணைத்தகைக் குழந்தையோடு அழுக்கடைந்த உடையோடு அன்னம்கேட்டிடும் பெண்ணொருத்தி ! வாழ்க்கையின் நிஜம் உணர்த்தினாள் !   கல்லூரியில் படிக்கும்மகனை காலையில் எழுப்பும்போது கனமான அவன் எதிர்காலம்…

கல்வி

  கல்லாய் இருந்த மனிதனை உயிர்சிலையாய் மாற்றியது கல்வி ! மரமாய் இருந்த மனிதனை உயிர்ச்சிற்பமாய் மாற்றியது கல்வி !   மண்ணாய் இருந்த மனிதனை மாணிக்கமாய் மாற்றியது கல்வி ! மலையாய் இருந்த மனிதனை மரகதமாய் மாற்றியது கல்வி !   காடாய் இருந்த மனிதனை கலை…

அன்பு

  அடைக்கும்தாழ் தேடுகிறேன் அழிவில்லா அன்பிற்கு ! மடைதிறந்ததுபோல் வரும் அன்பிற்கு தடுக்கும் சுவர் தேடுகிறேன் !   எல்லாம் வல்ல இறைவன் மேல்கொண்ட அன்பு இப்பூவுலகை விட்டு நீங்கிய பின்பும் !   பெற்றோரிடம் கொண்ட அன்பு பிறந்தது முதல், உடன்பிறந்தோரிடம் கொண்ட அன்பு உயிர்த்தெழுந்தது முதல்…