1. Home
  2. கடலாடி

Tag: கடலாடி

கடலாடியில் முன்னாள் அமைச்சரிடம் ரூ.1.70 லட்சம் நூதன மோசடி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தியிடம் ரூ.1.70 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கடலாடி தாலுகா மேலச்செல்வனூர் கிராமத்தில் வசித்து வருபவர் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி. இவர் தற்போது திமுக தீர்மானக் குழு மாநில துணைச் செயலராக உள்ளார்.…

கடலாடி, முதுகுளத்தூரில் “அம்மா’ திட்ட முகாம்

கடலாடி, முதுகுளத்தூர் பகுதிகளில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலாடி அருகே இருவேலி ஊராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு வட்ட வழங்கல் அலுவலர் மாதவன்  தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் மாரிப்பாண்டி, கிராம உதவியாளர் சர்க்கரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம்,…

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை வெளிநடப்பு, ஆர்ப்பாட்டம் செய்தனர்.   தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் முதுகுளத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத்…

முதுகுளத்தூர் பகுதியில் எம்.ஜி.ஆர். நினைவு தினம்

முதுகுளத்தூர், சாயல்குடி, கடலாடி, கமுதி ஆகிய இடங்களில் வியாழக்கிழமை அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. முதுகுளத்தூரில் காந்தி சிலை,பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு அதிமுக ஒன்றியச் செயலர் ஆர்.கருப்பசாமி தலைமை வகித்தார். ஜெயலலிதா…

முதுகுளத்தூர்,கடலாடியில் அதிமுக பொதுக்கூட்டம்

முதுகுளத்தூர், கடலாடியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக 44 ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.  முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்திற்கு ஒன்றியச் செயலர் ஆர்.கருப்புச்சாமி தலைமை வகித்தார். கூட்டத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தர்ராஜன், சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழுத்…

முதுகுளத்தூர், கடலாடி, கமுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர், கடலாடி, கமுதியில் சனிக்கிழமை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் பற்றிய வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. முதுகுளத்தூர் சோனை மீனாள் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணிக்கு, வட்டாட்சியர் கே.கே. கோவிந்தன் தலைமை வகித்தார். பேரணியானது,…

முதுகுளத்தூர் பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினி வழங்கல்

முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களுக்குள்பட்ட பள்ளிகளில் அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. அந்தந்த பள்ளிக்களில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர்கள் வரவேற்றனர். ஒன்றியத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிரநிதிகள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.…

கடலாடி, முதுகுளத்தூரை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்திட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

முதுகுளத்தூர், : கடலாடி, முதுகுளத்தூர் பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகவிட்டன. எனவே இப்பகுதிகளை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி, முதுகுளத்தூர் தாலுகாக்களில் ஆப்பனூர், கடலாடி, கீழச்செல்வனூர், சாயல்குடி, கண்டிலான், முதுகுளத்தூர் தெற்கு, இளஞ்செம்பூர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட…

முதுகுளத்தூர், கடலாடி, கமுதி தாலுகாக்களில் மழை நீடிப்பு

ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி,  முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய தாலுகாக்களில் இன்று(சனிக்கிழமை) 4-வது நாளாக தொடர்ந்து மழை பெய்தது. இதையொட்டி விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வங்காளவிரிகுடா கடலில் தாழ்வான காற்றழுத்த மண்டலம் உருவாகி இருப்பதில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து இரவு, பகலும் மழை…

கடலாடி அருகே கோயில் உண்டியலை உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டு

கடலாடி அருகே உள்ள புரசங்குளத்தில் கோயில் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.20 ஆயிரம் திருடப்பட்டுள்ளதாக கடலாடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே புரசங்குளத்தில் உள்ள மாசாணசுவாமி கோயிலில் சனிக்கிழமை இரவில் மர்ம நபர் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.20ஆயிரத்தை திருடி…