உயிர் எழுத்துக் கோவை!
உயிர் எழுத்துக் கோவை! ‘அ’ண்டம் வெடித்திங்கு ‘ஆ’னது வையமென அறிவியல் மொழி ‘இ’ரவு இருளை உமிழ்ந்தபின்பு ‘ஈ’ரநீரும் குளிர்ந்ததாகி ‘உ’யிரின் முதல் உயரினமே ‘ஊ’ர்ந்த ஒரு “செல்”லாகி ‘ஊ’ழிக்காலம் பிறந்ததாமே! ‘எ’ண்ணவியலா கணக்கெனினும் ‘ஏ’ழுவானம் எழுதித் தீர்க்க ‘ஐ’ம்பூதங்கள் அழகு சேர்க்க ‘ஒ’ப்பாரும் மிக்காருமற்ற ‘ஓ’ரிறை படைத்தான் உலகை..…