1. Home
  2. ஆலிம்

Tag: ஆலிம்

தாய்சபையை போற்றிய ஆலிம் பெருமகனார்…

தாய்சபையை போற்றிய ஆலிம் பெருமகனார்… கடையநல்லூர் கன்ஸுல் உலூம் #யூசுப்அன்ஸாரிஹஜ்ரத் (ரஹ்..) அவர்கள்… தமிழகத்தில் தலைசிறந்த ஆலிம் பெருமக்களில் ஒருவராகவும், தாய்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைமைக்கு கட்டுப்படும் அறிஞர் பெருமக்களில் முக்கியமானவராகவும் வாழ்ந்து மறைந்த… தென்மதீனா எனப்போற்றும் கடையநல்லூர தந்த தங்கம், பைஜுல் அன்வார் அரபிக்…

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்!

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்! 12 அ. முஹம்மது கான் பாகவி அதுவென்ன சுன்னத் வல்ஜமாஅத்? அறிவும் ஆர்வமும் மிக்க மாணவக் கண்மணிகளே! ‘அகீதா’ எனும் கொள்கைவியலைப் பயில்கையில் முக்கியமாக நீங்கள் அறிந்து அசைபோட வேண்டிய விஷயம், மாறுபட்ட சிந்தனைக் குழுக்கள் பற்றியும் சரியான சிந்தனை எது என்பது பற்றியும்…

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்!

– அ. முஹம்மது கான் பாகவி   அ ரபி மத்ரஸாக்களின் மாணவக் கண்மணிகளே! குர்ஆனியகலைகள் நம் பார்வையில் ஐந்து என முந்தைய தொடரில்குறிப்பிட்டிருந்தோம். அதில் முதலாவது, திருக்குர்ஆனைத்திருத்தமாகவும், இராகமாகவும் ஓதக் கற்பிக்கின்ற ‘தஜ்வீத்’ எனும்கலையாகும் என்றும் விவரித்திருந்தோம். திருக்குர்ஆன் மனனப் பிரிவு அடுத்து இரண்டாவது, திருக்குர்ஆனைத் தவறோ தடுமாற்றமோ இல்லமால்மனனம் செய்கின்ற அற்புதமான கலை. பொதுவாக எல்லா முஸ்லிம்களும்குர்ஆனின் சில பகுதிகளையேனும் மனனம் செய்திருக்க வேண்டும்.அப்போதுதான், தொழுகைகளில் குர்ஆன் அத்தியாயங்களை (சூரா) ஓதி,முறையாகத் தொழுகையை நிறைவேற்ற இயலும். “குர்ஆனின் தோற்றுவாயான ‘அல்ஃபாத்திஹா’ எனும் முதல்அத்தியாயத்தை ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை” என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (புகாரீ – 756) அது மட்டுமன்றி, நபித்தோழர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்கூறினார்கள்: இறைமறையில் ஒன்றுமே இல்லாத உள்ளம், குடியிருப்பவர் இல்லாதஇல்லம் போன்றது. அந்த இல்லம் சிதிலமடையும்; அந்த உள்ளமும்சிதிலமடையும். (தாரிமீ) இதன்றி, முழு குர்ஆனையும் முறையாக மனனம் செய்து, தொடர்ந்துஓதிவருபவர்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு. நபித்தோழர் அபூஉமாமா (ரலி)அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை (மனனமாக) ஓதிவாருங்கள்! இந்தப் பிரதிகள்தான்இருக் கின்றனவே! (பார்த்து ஓதிக்கொள்வோம்) என ஏமாந்துவிடவேண்டாம்! ஏனெனில், குர்ஆனை மனனம் செய்த இருதயத்தைஅல்லாஹ் நிச்சயமாக ஒருபோதும் வேதனை செய்யமாட்டான். (தாரிமீ) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை நன்கு மனனமிட்டுத் தங்குதடையின்றி ஓதுகின்றவர்,கண்ணியம் நிறைந்த தூதர்(களான வானவர்)களுடன் இருப்பார்.குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதை) சிரமத்துடன் திக்கித்திணறி ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு. (முஸ்லிம் – 1462) ஆக, திருக்குர்ஆனை மனனமிட்ட ஹாஃபிள்கள் வானவர்களுடன் இருக்கும்மரியாதையைப் பெறுகிறார்கள். மறுமையில் ஹாஃபிள்களுக்குக் கிடைக்கும்மாபெரும் தகுதியைப் பாருங்கள்; நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: குர்ஆனை மனனமிட்டவர் சொர்க்கத்தினுள் நுழையும்போது, “ஓதுங்கள்! (படித்தரங்களில்) ஏறிக்கொண்டே இருங்கள்” என்று கூறப்படும்.அவ்வாறே, அவரும் ஓதுவார். ஒவ்வொரு வசனத்திற்கும் ஒருபடித்தரத்தில் ஏறிக்கொண்டிருப்பார்; அவருக்கு மனனமாக உள்ள கடைசிவசனத்தை ஓதுகின்றவரை. (இப்னுமாஜா) மனனப் பிரிவில் இருக்கும் மாணவர்களே! அல்லாஹ்விடம் உங்களுக்குள்ளமரியாதையைப் பார்த்தீர்களா? நன்கு தஜ்வீதுடன் தடுமாற்றமின்றி,பிழையின்றி, மனனம் செய்யுங்கள். வசனங்களின் வரிசைக் கிரமம்மாறிவிடாமல், ஒரே சொல் மறுபடி வரும் இடத்தில் குழப்பமடைந்துவிடாமல்,உச்சரிப்பில் குளுறுபடி நேராமல், உருப்போடும்போதே மிகச் சரியாகவும்தரமாகவும் உள்ளத்தில் பதியச் செய்துவிடுங்கள். புனித ரமளானில் மட்டும் பயிற்சி எடுப்பது, மற்ற நாட்களில் தளர்ச்சிஅடைவது என்று இருந்துவிடாதீர்கள். ஏனெனில், மறப்பதில் குர்ஆனுக்கேமுதலிடம் என்றுதான் சொல்ல வேண்டும். நபி (ஸல்) அவர்கள்எச்சரிக்கிறார்கள்: குர்ஆனை (ஓதி அதை) கவனித்துவாருங்கள். ஏனெனில், என் உயிர்எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! கயிற்றில்கட்டி வைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தைவிட மிக வேகமாக குர்ஆன்(நினைவிலிருந்து) தப்பக்கூடியதாகும். (புகாரீ-5033) குர்ஆன் மொழிபெயர்ப்பு: திருக்குர்ஆன் கலைகளில் நாம் கற்க வேண்டிய மூன்றாவது கலை,திருக்குர்ஆனின் வசனங்களுக்கான பொருளை அறிவதாகும். குர்ஆனைப்பார்த்து ஓதவும் மனனம் செய்யவும் முடிந்த ஒருவருக்கு அதன் அர்த்தம்தெரியாது என்பது எவ்வளவு பெரிய இழப்பு! கையில் கருவூலத்தைவைத்துக்கொண்டு, அதை அனுபவிக்காமல் சுவைக்காமல் எடுத்தெடுத்துப்பார்த்துவிட்டுத் திரும்ப அதே இடத்தில் வைத்துப் பூட்டுகின்ற மனிதனுக்கும்உங்களுக்கும் என்ன வித்தியாசம்? இன்றெல்லாம், பொருள் அறிந்து குர்ஆனை ஓத வேண்டும் என்ற ஆர்வம்சாதாரண பொது மக்களுக்கே உருவாகியிருப்பதைப் பார்க்கிறோம். இதற்காகநடக்கும் சிறப்பு வகுப்புகளுக்கு வயதானவர்களும் இளைஞர்களும்படையெடுக்கிறார்கள். வாய்ப்பு இல்லாதவர்கள் மொழிபெயர்ப்புகளைவாசித்துத் தங்கள் அறியாமையை அகற்றிக்கொள்கிறார்கள். இன்னும் சிலர்,தொழுகைக்குப்பின் வாசிக்கப்படும் மொழிபெயர்ப்பைக் கேட்டுப்பயனடைந்துவருகிறார்கள். அப்படியிருக்க, மத்ரஸா மாணவர்கள் இதில் எவ்வளவு கவனம் செலுத்தவேண்டும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? பொருள் தெரியாமல் பொதிசுமப்பதற்கு நாமென்ன இஸ்ரவேலர்களா? திருக்குர்ஆனில், அதை அருளியவன் அறைகூவல் விடுக்கின்றான்:…