1. Home
  2. கைது

Tag: கைது

முதுகுளத்தூர் அருகே நகை, பணத்தை திருடியதாக 2 பேர் கைது

முதுகுளத்தூர் அருகே திருவரங்கத்தில் 3 பவுன் நகையையும், ரூ.8 ஆயிரம் பணத்தையும் திருடியதாக 2 பேரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர். திருவரங்கத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் மகன் கவாஸ்கர் (28). இவர், தனது குழந்தையுடன் பள்ளிக்குச் செல்லும்போது பணம் மற்றும் நகையை குழந்தையின் பையில் வைத்திருந்தாராம். இதற்கிடையே கடைக்குச்…

முதுகுளத்தூரில் போலீஸ்காரரை தாக்கிய இளைஞர் கைது

முதுகுளத்தூரில் போலீஸ்காரரைத் தாக்கியதாக இளைஞர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.  முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலையம் முன்பு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முதுகுளத்தூர் மொச்சிகுளத்தார் தெருவைச்சேர்ந்த சிந்தா சேக்  மகன் செய்யது அபுதாஹிர் (31) இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.   அந்த வாகனத்தை போலீஸார் சோதனையிட…

முதுகுளத்தூர் அருகே தகராறில் ஈடுபட்டவர் கைது

முதுகுளத்தூர் அருகே முன்விரோதம் காரணமாக தகராறு செய்தவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம் (58). இவர், தனது குடும்பத்துடன் தேவர்குறிச்சியில் வசித்து வருகிறார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த செல்வம் (40) என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்…

முதுகுளத்தூரில் பைக் மோதி முதியவர் சாவு: இளைஞர் கைது

முதுகுளத்தூரில் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான இளைஞரை, 2 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.    ராமநாதபுரம் மாவட்டம், இளஞ்செம்பூரைச் சேர்ந்த குழந்தைவேல் மகன்  ராஜேந்திரன் (61). இவர், முதுகுளத்தூர் செல்லி அம்மன் கோயில் தெருவில்…

பைக் மோதி பெண் படுகாயம்: ஒருவர் கைது

முதுகுளத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண் மீது பைக் மோதியது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (60). இவர் சாலையில் நடந்து சென்ற போது அவ்வழியாக ஆர்.எஸ்.மங்களம் அருகே உள்ள வலம்மாதூரைச் சேர்ந்த வேலு மகன் கதிர்வேல் (37)…

மது பாட்டில்கள் விற்றவர் கைது

முதுகுளத்தூர் அருகே பெட்டிக் கடையில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.  கிடாத்திருக்கையைச் சேர்ந்த  ஆண்டி மகன் முத்திருளாண்டி (75). இவர் ஊரில் பெட்டிக்கடையில் மது பாட்டில்கள் விற்று வந்தாராம். இது குறித்து பேரையூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன் பேரில் சார்பு ஆய்வாளர் செல்லமணி…

வேலைக்காரப் பெண் புகார்: கடை உரிமையாளர் கைது

முதுகுளத்தூரில் பெண்ணை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த கடை உரிமையாளரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.  சாயல்குடி யாதவர் நகரைச் சேர்ந்த முனியசாமி மகன் சக்திவேல் (49). இவர் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் புகைப்படம் எடுக்கும் கடை வைத்துள்ளார். இந்தக் கடையில் தேரிருவேலி அருகில் உள்ள உத்தன்   …

போலீஸ் போல் நடித்து பேருந்தில் பயணம் செய்த இளைஞர் கைது

முதுகுளத்தூரில் போலீஸ் போல் நடித்து அரசுப் பேருந்தில் பயணம் செய்த இளைஞரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.   முதுகுளத்தூர் அருகே உள்ள பிரபக்களூர் கிராமத்தைச் சேர்ந்த சோனை மகன் ஜெயபால் (25). இவர் தனது ஊரில் இருந்து முதுகுளத்தூருக்கு வரும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது…

திருட்டு மணல் அள்ளிய ஜே.சி.பி., டிராக்டர் பறிமுதல்: இருவர் கைது

முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குளம் கிராமத்தில் திங்கள்கிழமை அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த ஜே.சி.பி. இயந்திரம் மற்றும் டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சாக்குளம் கண்மாய்க்குள்  மலட்டாறைச் சேர்ந்த ஜே.சி.பி. ஓட்டுநர் குமார், டிராக்டர் ஓட்டுநர் சுப்பிரமணியன் ஆகிய இருவரும்  அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.…

இடத்தகராறில் தாய்மாமனை கொலை செய்த விவசாயி கைது

முதுகுளத்தூர் அருகே இடத்தகராறில் தாய்மாமனை கல்லால் தாக்கிக் கொலை செய்த விவசாயியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.   முதுகுளத்தூர் அருகே உள்ள கிடாத்திருக்கையைச் சேர்ந்தவர் முத்துவழிவிட்டான்(46). விவசாயியான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தாய்மாமன் முத்துமணிக்கும்(67) இடையே இடத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.   இந்நிலையில் பிரச்னைக்குரிய…