நீயும் நீயும் நானாவேன்..
நீயும் நீயும் நானாவேன்.. (கவிதை) வித்யாசாகர்! 1 கிழித்துப்போட்ட காகிதங்களைப் போல கிடக்கிறது உனக்காக காத்திருந்த மனசு; அள்ளி தீயிலிட நினைக்கிறேன் நீயில்லா தனிமைதனில்… ——————————————————- 2 நீ நிலவிற்கீடு ஒரு படி அதற்கும் மேல்.. எப்போதும் ஒளிர்ந்துக்கொண்டே யிருப்பாய் நானந்த ஒளியின் ஏதேனுமொரு மூலையில் நின்று உனைத் தொட்டவாறே…