தோற்றமும், பின்புலமும், புது நினைவும் !
முதல் கவிதை..! தோற்றமும், பின்புலமும், புது நினைவும் ! கவிஞர். மஸ்கட் மு.பஷீர் துண்டுக் காகிதங்களில் துளிர் விட்ட வார்த்தைகள் தூளியில் கூடுகட்டி தூங்காமலே போனது – எங்கு தேடியும் கிடைக்காமல்- இறுதியில் தேடினேன் கிடைத்ததென் மனதில் மறைவில் ! கன்னிக் கவிதை கன்னியர் பார்வையால் கர்ப்பம் தரிப்பது காலங்கால உண்மை ! மரபு மாறாத அந்த சுகப்பிரசவம் என்னிலும் சுகமாய்ப் பிறந்ததில் சுவைதானே சொல்வதற்கு ! X அன்று.. என் பள்ளிப் பருவம் பதினாறாய் மலர்ந்தது ! துள்ளிப் பறந்தன கவிதைப் பட்டாம் பூச்சிகள் ! கள்ளிக் கண்களின் கடையோரப் பார்வையால்… முள்ளால் குத்தியக் கள்ளியின் பாலாய் வெள்ளியாய் பரந்தது மனதில் கூடவே…