1. Home
  2. இலக்கியம்

Category: காரைக்குடி பாத்திமா ஹமீது

உதவிசெய்யுங்கள் உயிர்களுக்கு…..

உதவிசெய்யுங்கள் உயிர்களுக்கு   வீசும்தென்றல் காற்றுகூட பிறர்சுவாசம் பெற்றிடத்தான்! உதிக்கும் சூரியனதுகூட பிறர்வெளிச்சம் பெற்றிடவே! மணம்தரும் மலர்கள்கூட தேன்தந்துதான் உதிர்கிறது! விழும்மழைத் துளிகள்கூட விளைச்சலைப் பெருக்கவே! வளரும் செடிகள்கூட பிறர்புசிக்க காய்கள்தரும்! வளர்ந்த மரங்கள்கூட பறவைகளின் புகலிடமாம்! பிறருக்கு உதவிடவேநம் பிறப்பு இருந்திடவேண்டும்! இறக்கும்போது எல்லோர்மனதிலும் இடம்பெற்றிருக்க வேண்டும்!…

நம்பிக்கை வேண்டும்

என்னயிந்த வாழ்க்கையென்று அலுத்துக்கொள்ளும் நேரங்களில், நம்பிக்கைதரும் நிகழ்வுகள்சில என்கண் முன்பே! அணைத்தகைக் குழந்தையோடு, அழுக்கடைந்த உடையோடு, அடுத்தவீட்டு வாசலில், அன்னம்கேட்டிடும் பெண்ணொருத்தி! வாழ்க்கை வாழ்வதற்கேவென நம்பிக்கை கொடுத்தாள்! கல்லூரியில் படிக்கும்மகனை, காலையில் எழுப்பும்போது, கனமான எதிர்காலம்குறித்து, கலக்கம் எனக்குள்! திறந்தபாடப் புத்தகத்தோடு, தெருவிளக்கின் கீழே, தேர்விற்காகப் படிக்கும் திண்ணைவீட்டுப்…

புரட்சியின் பூபாளம்

வரதட்சணை பாரத்தால் வாடிடும் பெண்களுக்கும், மாமியார் கொடுமையால் மாண்டிடும் பெண்களுக்கும், பாலியல் பலாத்காரத்தால் பரிதவிக்கும் பெண்களுக்கும், அடுக்களை வேலைகளில் அல்லல்படும் பெண்களுக்கும், கள்ளிப்பால் குடித்துக் கருகிப்போன சிசுக்களுக்கும், நெல்மணிகளின் நெருக்கத்தால் நீர்த்துப்போன பெண்களுக்கும், புலரவேண்டும் புரட்சியின் பூபாளம்! மல்லிகைபோன்ற பெண்கள்நல் மதிப்புப்பெற்றிட வேண்டும்! மங்கையரைக் கண்டவுடன் மரியாதையேற்பட வேண்டும்!…

என்ன கொண்டு வந்தோம்?

உறங்கிக் கிடக்கும் கல்லறையில் இறந்துபோன மனிதர்கள் என்னகொண்டு வந்தார்கள்? எதையெடுத்துச் சென்றார்கள்? இறைவன்தந்த இனியவாழ்வில் ஏழைகளைக் கண்டால் எகத்தாளம் ஏன்? பணக்காரனைக் கண்டால் பணிவு ஏன்? போதுமென்ற மனம்படைத்தவன் பெரும் பணக்காரன், கோடியிருந்தும் போதாதென்பவன் படுபிச்சைக்காரன்! போட்டியும் பொறாமையும் கொண்டு பிறவிப்பயனை வீணாக்கவேண்டாம், அன்பாலும் கருணையாலும் ஆனந்தவாழ்வாக மாற்றவேண்டும்!…

நான்

நான் ஏதோசில கற்பனைகள் என்னுள்ளே எப்போதும்! மனிதவாழ்வே வேண்டாம் மரமாய்ப்பிறக்க வேண்டும்நான்! இளைப்பாறநிழல் கொடுத்து இனியகனிகள் அளித்து, பறவைகள் கூடமைத்துவாழ பாதுகாளித்திட வேண்டும்நான்! நீராகநான்மாறி உயிர்களின் தாகம்தீர்த்திட வேண்டும்நான்! காற்றாகமாறி அனைவரின் சுவாசமாக வேண்டும்நான்! கல்லாகமாறி உளியால் சிலையாக வேண்டும்நான்! அலையாகமாறி சமுத்திரத்தில் சங்கமிக்க வேண்டும்நான்! மலராய்ப் பிறந்து…

அன்புத் தோழி

நிறத்தைப் போலவே மனமும் வெள்ளை என்றவளே! அதைக் கருமையாக்கிவிட்டு எங்கே சென்றாய்? தேனினும் இனிமை குரல் என்றவளே! அதைக் கசப்பாக்கிவிட்டு எங்கே சென்றாய்? பாலினும் தூய்மை குணம் என்றவளே! அதைத் திரியவைத்துவிட்டு எங்கே சென்றாய்? கண்கள் கலங்கிய போதெல்லாம் என்னைவிட உன்கைகள் என்கண்களைத் துடைத்தனவே! இன்றும் கலங்குகிறேன் உன்கைகளுக்காக…

சுதந்திரம் எங்கே?

சுதந்திரம் எங்கே? சத்தியாகிரகம் செய்து வாங்கிய சுதந்திரத்தை குடிமக்கள் சாராயக்கடைகளில் தொலைத்து விட்டோம்!அகிம்சையால் அடைந்த சுதந்திரத்தை அணைக்கட்டுப் பிரச்சினைக்கு ஆட்படுத்திவிட்டோம்! போராடிப்பெற்ற சுதந்திரத்தை பாலியல் தொல்லைகளுக்கு பலியாக்கிவிட்டோம்! வீர்ர்களையிழந்து  வென்ற சுதந்திரம் வெடிகுண்டுகளுக்கு இரையாகிப் போகிறது! இலக்குகளை அடையப்பெற்ற சுதந்திரம் இலஞ்ச ஊழல்களுக்குப் பங்கீடாகிறது! சமாதானமாக நாம்பெற்ற சுதந்திரம்…

எழுந்து வா

எழுந்து வா எடுத்துக்காட்டுக்காகத்தான் எழுதினேன்-உன் அயராத உழைப்பையும் அஞ்சாத துணிவையும்! உழைத்தது போதுமென்றுதான் ஓய்வெடுத்துக் கொண்டாயோ? கனவுகாணும் இளஞைர்களைக் கண்ணீரில் ஆழ்த்திவிட்டாயே! பூமியில் இருந்து கொண்டு விண்வெளி ஆராந்தாய்! எதைஆராய்வதற்கு விண்வெளி சென்றாய்? அக்னிச்சிறகுகளத் தந்துவிட்டு எங்கேநீ பறந்து போனாய்? ஏவுகணையைத் தந்துவிட்டு எதிலேறிச் சென்றதுன் ஆத்மா? மாற்றுத்திறனாளிகளுக்கு…

துணிவு! காரைக்குடி பாத்திமா ஹமீத் ஷார்ஜா..

துணிவு! காரைக்குடி பாத்திமா ஹமீத் ஷார்ஜா.. எத்தனையோ இடர்பாடுகள் இருள்சூழ்ந்த நாட்கள்.. தனிமையான தருணங்கள் அத்தனையும் வென்றிடலாம் துணிவுடன் செயல்பட்டால்! அடிமைப்பட்ட இந்தியாவை அகிம்சையால் வென்று அந்நியரிடமிருந்து மீட்டது அண்ணல்காந்தியின் துணிவு! வறுமையென்று வாடிடாமல் அயராத உழைப்பால் அணுச்சக்தியைக் கண்டுபிடித்தது அப்துல்கலாமின் துணிவு! துணிந்த மனதிற்கு துன்பமில்லை! தோல்வியென்பது…

உன்னால் முடியும்

மூமினான பெண்ணே ! உன்னால் முடியும் கண்ணே ! சாதனைகள் படைப்போம் சோதனைகளைத் தவிர்ப்போம் ! புன்னகையால் புதியதோர் உலகம் படைப்போம் ! பார்போற்ற வாழ்வோம் பௌத்திரங்கள் செய்வோம் ! அன்பால் அகங்காரம் வெல்வோம் ! அடக்கத்தால் அதிகாரம் தீர்ப்போம் ! பாசத்தைக் கொடுத்து உயிரிகளிடத்தில் நேசம் வளர்ப்போம்…