1. Home
  2. பயனுள்ள தகவல்கள்

Category: பயனுள்ள தகவல்கள்

மிகவும் பயனுள்ள இயற்கை மருத்துவ குறிப்புகள்

மிகவும் பயனுள்ள இயற்கை மருத்துவ குறிப்புகள் 1.நெஞ்சு சளி: [NENJU SALI] தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2.தலைவலி: [THALAI VALI] ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு…

ஊடகச்சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்

ஊடகச்சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்   தற்போதைய மத்திய அரசின் கீழ் ஊடகச்சுதந்திரம் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிவருகிறது. ஊடகங்களை அரசின் ஊதுகுழலாக மாற்றும் இழிமுயற்சிக்கு இணங்காமல்  மக்களின் கண்ணோட்டத்திலிருந்து அரசை விமர்சிக்கின்ற ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது பொய்வழக்கு பதிவது, ஒளிபரப்பை நிறுத்துவது, கைது செய்வது, சிறைப்படுத்துவது, விளம்பரங்களை மறுப்பது உள்ளிட்ட போன்ற அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன.. அரசையும் ஆளுங்கட்சியையும் விமர்சிக்கும் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தேசவிரோத சக்திகள், அர்பன் நக்சல்கள், அன்னிய கைக்கூலிகள், நடுநிலை தவறியவர்கள் என்று  இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பொதுவெளியில் பரப்பி வருகின்றனர். ஊடக விவாதங்கள் அனைத்திலும் தங்கள் தரப்பை இடம்பெறச் செய்யவேண்டும் என்று மிரட்டுவதும், விவாதப் பொருள் குறித்த அடிப்படையறிவுகூட இல்லாத பலரை நானாவிதப் பெயர்களில் உள்ளே நுழைப்பதும், விவாதங்களில் நெறியாள்பவர்களையும் கருத்தாளர்களையும் கண்ணியமற்ற முறையில் வசைபாடுவதுமாக இவர்களது அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக உலகளாவிய ஊடகச்சுதந்திரம் குறித்தான அட்டவணையில் இந்தியா 142ஆவது இடத்தைப் பெற்று கீழிறங்கியுள்ளது. தமிழகத்தில் பெண் ஊடகவியலாளர்களை, கருத்தாளர்களை பாலினரீதியாக சிறுமைப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. இப்போது நியூஸ் 18 தொலைக் காட்சியில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மீது புகார் ஒன்று அந்த நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் ஏராளமான பொய்களும் தகவல் பிழைகளும் இருக்கின்றன.. அதில் பெரியாரிய அம்பேத்கரிய, மார்க்சிய கருத்தியல்கள் மீதான வெறுப்பு மலிந்துள்ளது. தங்களை விமர்சிக்கிற யாரும் பணியில் தொடர முடியாது என அச்சுறுத்த இந்தப் பொய்ப்புகாரை இறக்கியுள்ளவர்களுக்கு தமுஎகச தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துகொள்கிறது. இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக கண்டனம் எழுப்புமாறு ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைவரையும் தமுஎகச கேட்டுகொள்கிறது. இந்த அடாவடி கும்பல் மீது சட்டரீதியான நடவடிக்கை  எடுத்து ஊடகச்சுதந்திரத்தை பாதுகாக்கும் அரசியல் சாசனக் கடமையை நிறைவேற்றுமாறு தமிழக அரசை தமுஎகச வற்புறுத்துகிறது. -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்  

மத்திய அரசுக்குப் பிடிக்காத திட்டம்

மத்திய அரசுக்குப் பிடிக்காத திட்டம்   2005-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இடதுசாரிகளின் ஆதரவுடன் பதவியில் இருந்தபொழுது இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தால் கொண்டுவரப்பட்ட முக்கியமான திட்டம்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டம். பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இருந்த பொழுதும் பின்னர் 2014-ம் ஆண்டு பதவியேற்ற பொழுதும் இந்த திட்டத்தை ஆதரித்தது இல்லை. இந்த திட்டத்திற்கு நிதி அதிகம் வேண்டும் என கோரிய பொழுது “முந்தைய அரசாங்கத்தின் மிகப்பெரிய தோல்வியின் அடை யாளமாக மட்டுமே இது தொடரும்” என மோடி கூறினார். அதாவது இந்தத் திட்டம் தேவையற்றது என்பது மோடி அரசாங்கத்தின் நிலை! எனவே தொடர்ந்து இந்தத் திட்டத்திற்குத் தரப்பட்ட முக்கியத்துவமும் நிதியும் குறைக்கப்பட்டே வந்தது.   கோவிட் 19 காலத்தில் 15 கோடிக்கும் அதிகமான உழைப்பாளிகள் வேலை இழந்துள்ளனர். கோவிட் பிரச்சனை எப்பொ ழுது முடியும் என்பதோ அல்லது வேலை இழந்த உழைப்பாளிகள் பலருக்கு எப்பொழுது மீண்டும் வேலை கிடைக்கும் என்பதோ எவருக்கும் தெரியாது. இந்த சூழலில் ஊரக வேலை உறுதித் திட்டம் கிராமப்புறங்களில் தொடர வேண்டும் என்பது மட்டுமல்ல; இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள பணி நாட்களும் ஊதியமும் அதிகரிக்க வேண்டும் எனவும் இந்தத் திட்டம் நகர்ப்புறங்களிலும் அமலாக்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரி வருகின்றனர். இதற்காக விவசாய சங்கங்களும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் தேசம் முழு தும் பல இயக்கங்களை நடத்தி வருகின்றன. இந்த வலுவான இயக்கங்களுக்குப் பின்னர்தான் மோடி அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டினை அதிகரிக்க முன்வந்தது. ஆனால் தேவையை ஒப்பிடும்பொழுது இது மிக குறைவுதான். குறிப்பாக லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கிராமங்களுக்குத் திரும்பியுள்ள சமயத்தில் இந்த திட்டத்தின் தேவை பன்மடங்கு உயர்ந்துள்ளது. 25000 மற்றும் அதற்கு அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பிய 116 மாவட்டங்களில் சென்ற ஆண்டு மே மாதம் 48.22 லட்சம் குடும்பங்கள் இந்த திட்டத்தை நாடினர் எனில், இந்த ஆண்டு மே மாதம் 89.23 லட்சம் குடும்பங்கள் இந்த திட்டத்தை நாடியுள்ளனர். இது 86.27%  உயர்வு ஆகும்.   இந்த ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு ரூ 65,000 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் முந்தைய பாக்கி ரூ.11,500 கோடி ஆகும். எனவே உண்மையான ஒதுக்கீடு சுமார் 50,000 கோடி மட்டுமே. ஊரடங்குக்குப் பின்னர் கடுமையான விமர்சனம் கார ணமாக மேலும் 40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவும் கூட போதாது என சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ரூ.1,50,000 முதல் ரூ.1,90,000 கோடி ஒதுக்கீடு செய்தால்தான் கிராமப்புறங்களில் உள்ள வேலை இழந்த பெரும்பான்மையினருக்கு வேலையும் ஓரளவு நிவாரணமும் கிடைக்கும். மேலும் இதனை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. எந்தத் திட்டம் அகற்றப்பட வேண்டும் என மோடி கூறினாரோ அந்த திட்டம்தான் இன்று மிக முக்கியத் தேவையாக மாறி உள்ளது. நவீன தாராளமயப் பொருளாதார கோணத்தில் இருந்து இந்த பிரச்சினையை அணுக முடியாது என்பதை கோவிட்19 பெருந்தொற்று தெளிவாக்கியுள்ளது. (-ஜூலை 1 தீக்கதிர் நாளிதழில் அ. அன்வர் உசேன் எழுதிய கட்டுரையிலிருந்து)

கவியரசர் கண்ணதாசன் 94-வது பிறந்த நாள் விழா

தமிழ் வளர்ச்சி மன்றம் ஆஸ்திரேலியா வழங்கும்  கவியரசர் கண்ணதாசன் 94th பிறந்த நாள் விழா நிகழ்ச்சி  https://youtu.be/YyMqd_I6QTg

கொரோனாவைக் குணமாக்கும் மூலிகை தேநீர் :

#கொரோனாவைக் #குணமாக்கும் #மூலிகை #தேநீர் : சித்த மருத்துவர் #வீரபாபு அவர்கள் கொரோனாவைக் குணப்படுத்த கபசுரக் குடிநீருக்கு துணை மருந்தாக அவர் கண்டுபிடித்த மூலிகை தேநீரையும் சேர்த்துக் கொடுத்து தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஆங்கில மருந்து இல்லாமல், முழுவதும் சித்தா மருந்துகளைக் கொண்டே #கொரோனாவை ஒரே வாரத்தில் குணப்படுத்தி…

இணையவழி உரைத்தொடர்

தமிழ் மரபு அறக்கட்டளையின் இணையவழி உரைத்தொடர் யூடியூப் காணொளிகளாக .. .. .. .. .. இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சியில்…   ஜூன் 7, 2020 “தெற்கத்திச்சீமை பாளையக்காரர்களும் சிங்கம்பட்டி ஜமீனும்”  – முனைவர். இரா. அனுசுயா     https://youtu.be/h7Ss-JBe62g

தோல்வி என்பது வீழ்ச்சியல்ல…..

தோல்வி என்பது வீழ்ச்சியல்ல…..   படிப்பினையே என்கிற வரலாற்று வெற்றி முழக்கத்திற்கு சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளால் நிறைந்த அவரது வாழ்க்கை முழுவதும் தோல்விகளும் பாதிப்புகளுமே அவரை அதிகமாக வரவேற்றிருக்கின்றன. நஷ்டம் ஏற்படும் போதெல்லாம், “பின்னடைவுகளில் இருந்து மீள ஒரு புது வழியைத் தெரிந்து கொண்டது எனக்கு லாபமே” என்று நம்பிக்கை வார்த்தைகளோடு உலகெல்லாம் உற்சாக விதைகளைத் தூவியிருக்கிறார் எடிசன். 1914 ஆம் வருடம் அவரது சோதனைச் சாலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு விட, நண்பர்கள் எல்லாம்வழக்கமான சோக கீதங்களைப் பாட, எடிசன் சொன்னாராம், ” தீ எவ்வளவு அழகாக எரிகிறது பாருங்கள்! ரசாயனப் பொருட்களைத் தவறான விகிதத்தில் கலந்து விட்டேன் போல..இந்தத் தோல்வி எனக்கு எவ்வளவு பெரிய படிப்பினை! ” என்று பூரித்துப் போனாராம். தனது 81- வது வயதில் மரணமடையும் வரை 1093 கண்டுபிடிப்புகளை எடிசன் பதிவு செய்ய முடிந்ததற்கு, தோல்விகளை வீழ்ச்சியாகக் கருதாத அவரது இந்த மனப்பான்மையே காரணம்.

சுற்றுச்சூழலை காப்போம் !

BE THE PART OF SOLUTION NOT THE PART OF POLLUTION ! Earth is the beautiful place; the earth is what we have in common. We should have the grace to make sure that it doesn’t…

பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்…

பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்… 1. பொதுவாக பாய் தரையில் விரிப்பதால், நாம் தரையில் உறங்குவதே ஒரு சிறந்த யோகாசனம்… 2. பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகு எழும்பு நேர்படுத்தப்படுகிறது, குழந்தைகளுக்கு இளம் வயது கூண் முதுகு விழுவதை தடுக்கிறது, [கல்வி கற்க்கும்…

இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு

இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு 🗝️குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீரருந்தவும். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது. 🗝️பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது. 🗝️புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு…