1. Home
  2. மருத்துவச்செய்திகள்

Category: மருத்துவச்செய்திகள்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச்.டி.(ஐ.பீ.எஸ் (ஓ ) உலகில் கொரானாவின் பாதிப்பு ஒரு கோடியே 80 லக்சமும் இறப்பு 6 லக்சம் 89 ஆயிரமும், இந்தியா உலகில் நான்காவது இடத்தில் 18,12,770 பாதிப்பும்,  இறப்பு 38, 249 ம் இதுவரை உள்ளது. ஆனால்…

கிராமங்களில் சூழ்ந்திருக்கும் அச்சமும் மன அழுத்தமும்

விருகம்பாக்கம் சித்தா மருத்துவமனை அளிக்கும் சிகிச்சை பற்றி இந்து தமிழ்வில் வந்த கட்டுரையை நான் நேற்று உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். அது நம்மிடையே ஒரு விவாதத்தை உருவாக்கியது. நல்லது. கொரோனா பற்றி ஜூன் 29 தீக்கதிர் முதல் பக்கத்தில் டாக்டர் வி.பிரமிளா எழுதிய கட்டுரையையும் நாம் படித்துப் பார்ப்பது நல்லது என நினைக்கிறேன். கிராமங்களில் சூழ்ந்திருக்கும் அச்சமும் மன அழுத்தமும்  …

நரம்பை பலப்படுத்தும் இஞ்சி

நரம்பை பலப்படுத்தும் இஞ்சி- இஞ்சி, மலைப் பிரதேசங்களில் அதிக மழை அளவு உள்ள இடங்களில் வளர்கிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. இஞ்சி வளர்வதற்கு மிதவெப்பமும், அதிக காற்று, ஈரத்தன்மையும் அவசியம். சாதாரணமாக 450 மீட்டர் முதல் 1800 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. வருடம்…

உடலின் ரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைக்கும் பச்சை சுண்டைக்காய்…

உடலின் ரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைக்கும் பச்சை சுண்டைக்காய்… இன்னும் ஏராளம்…ஏராளம்… கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம் உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக உள்ளே பல வித பாதிப்புகளை உருவாக்கலாம். அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது…

கொரோனாவை கேரளா கட்டுப்படுத்தியது எப்படி?.. நாம் அறிந்து கொள்வோம்!

கொரோனாவை கேரளா கட்டுப்படுத்தியது எப்படி?.. நாம் அறிந்து கொள்வோம்! ஏப்ரல் 12, 2020 ‘வாஷிங்டன் போஸ்ட்’ சிறப்புக் கட்டுரை கோவிட் 19 வைரஸைக் கட்டுப்படுத்தியதில் கேரள அரசாங்கத்தின் மகத்தான பணிகளை உலகப் புகழ் பெற்ற பத்திரிக்கையான ‘வாஷிங்டன் போஸ்ட்’ பட்டியலிட்டு பாராட்டியுள்ளது. கேரளாவின் பணிகள் இந்திய அரசாங்கத்திற்கே கூட முன்மாதிரியாக உள்ளது என வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. கேரளாவில்தான் முதல் தொற்று ஜனவரி மாதம் 30ம் தேதி பதிவானது. ஆனால் தொற்று சென்ற வாரத்தை ஒப்பீடு செய்யும் பொழுது 30% குறைந்தது மட்டுமல்ல; குணமடைந்தவர் களின் எண்ணிக்கை 34%ஆக உள்ளது. இது இந்தியாவிலேயே மிக அதிகம். மேலும் இது வரை 3பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இது மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது சிறந்த முன்னேற்றம் என குறிப்பிடும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை இது எப்படி சாத்தியமாயிற்று எனும் கேள்வியை எழுப்பி கீழ்கண்ட பதிலைத் தருகிறது: மிகத் தீவிரமான அதிக அளவிலான பரிசோதனைகள், தொற்று உள்ளவர்களைக் கண்டுபிடித்து நீண்ட நாட்களுக்கு தனிமைப்படுத்துதல், அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களை தீவிரமாக தேடிக் கண்டுபிடித்தல், தொற்று உள்ளவர்களுக்கும் குணமடைந்தவர்களுக்கும் அடிக்கடி மன நல ஆலோசனைகள்.. இவ்வாறு மன நல ஆலோசனையில் மட்டும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஈடுபடுகின்றனர் எனவும் வைரசுக்கு எதிரான போராட்டத்தில் 30,000க்கும் அதிகமான மருத்துவ ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் எனவும் இப்பத்திரிக்கை குறிப்பிடுகிறது. கேரளா சாதித்தது எப்படி? வெல்கம் டிரஸ்ட் எனும் தனியார் அமைப்பின் முதன்மை அதிகாரியும் தொற்று நோய் நிபுணருமான ஷாஹித் ஜமீல் கூறுகிறார்: “கேரளாவின் அணுகுமுறை மிகவும் கண்டிப்பும் அதே சமயம் மனிதாபிமானம் இரண்டும் கலந்ததாக இருந்தது. தொற்று பாதித்தவர்கள் கண்டிப்புத் தன்மையுடன் பாரபட்சமின்றி தனிமைப்படுத்தப்பட்டனர். அதே சமயம் மகத்தான மனிதாபிமானம் அவர்களிடம் காட்டப்பட்டது.” ” உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி ஹெங்க் பெகடம் இன்னோரு முக்கியமான கோணத்தை முன்வைப்பதையும் வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டுகிறது: கேரளா அதிவிரைவில் எப்படி கோவிட் 19 வைரசுக்கு எதிராக தன்னைத் தயார்படுத்திக் கொண்டது? கடந்த காலங்களில் நிபா போன்ற வைரசை எதிர்த்துப் போராடிய அனுபவம் கேரளாவுக்கு கை கொடுத்தது. அது மட்டுமல்ல; அப்பொழுது தான் கற்று கொண்ட படிப்பினைகளை கேரளா அமலாக்கியது. துல்லியமாக இவை எல்லாம் இப்பொழுது கேரளவுக்கு பலன் தருகிறது.” கேரளாவின் வெற்றிக்கு வேறு இரண்டு காரணங்களையும் ஹெங்க் பெகடம் குறிப்பிடுகிறார். அவை: 1. ஆபத்து குறித்த அம்சங்களை மக்களுக்கு வெளிப்படையாக தெரிவித்தது. இது அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்கியது. 2. கோவிட்19 க்கு எதிரான போரில் மக்களையும் ஈடுபடுத்தி, மக்கள் இயக்கமாக மாற்றியது.  கேரளா எதிர்கொண்ட ஆபத்துக்கள் வேறு எந்த ஒரு மாநிலத்தையும்விட கேரளா மிகப்பெரிய ஆபத்துக்கள சந்தித்தது. அவை என்ன? 1.    ஒரு ஆண்டிற்கு பத்து இலட்சம் சுற்றுலா பயணிகள் கேரளா விற்கு வருகின்றனர். 2.    கேரளா மக்கள் தொகையில் சுமார் 67 இலட்சம்பேர் வெளிநாடுகளில் பணியில் உள்ளனர். 3.    கேரளாவிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் சீனாவில் கல்வி பயில்கின்றனர். இந்த பிரிவினரில் எவர் வேண்டுமானாலும் வைரசைக் கேரளாவிற்குள் கொண்டுவரும் அபாயம் இருந்தது. அதுதான் நடக்கவும் செய்தது. சீனாவில் தொற்று பரவும் செய்தி வந்த உடனே அங்கிருந்து கேரளாவுக்கு திரும்பும் அனைத்து மாணவர்களும் வளைகுடா நாடுகளிலிருந்து வருவோரும் கட்டாய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்திய அரசாங்கம் அறிவிப்பதற்கு முன்பாகவே இந்த நடவடிக்கைகளை கேரள அரசாங்கம் எடுத்தது. அப்படித்தான் ஜனவரி 30 அன்றே சீனாவிலிருந்து வந்த மாணவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் அனைத்து நடவடிக்கைகளும் மிக வேகமாக எடுக்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிஸ்டுகள் ஆட்சி புரிந்த கேரளத்தில் அடிப்படை சுகாதாரத்துக்கும் மருத்துவ வசதிகளுக்கும் கல்விக்கும் மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டது எனும் அடிப்படை உண்மையையும் அதனால்தான் கல்வியிலும் மருத்துவ வசதிகளிலும் கேரளம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது எனவும் வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டுகிறது. இந்த சிறந்த மருத்துவ அடிப்படை வசதிகள்தான் உலக சுகாதார நிறுவனம் பிப்ரவரி மாதத்திலேயே வெளியிட்ட அனைத்து வழிகாட்டுதல்…

உலகை அலற வைத்த நோய்களின் கோர தாண்டவம்!

உலகை அலற வைத்த  நோய்களின் கோர தாண்டவம்! (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்.டி., ஐ.பீ.எஸ்(ஓ ) கடந்த இரண்டு மாதங்களாக உலகையே பதற வைக்கும்  நோயாக கொரானா இருக்கின்றது. உலக நாடுகளுக்கிடையே ஏற்படக் கூடிய சண்டைகளில் பயோ-கெமிக்கல் ஆயுதம் மிகவும் ஆபத்தான மனித கொல்லி ஆயுதமாக கூறப்…

டென்ஷனை குறைக்க வழி

டென்ஷனை குறைக்க வழி  Author: சுப்பிரமண்யன் G.R   உலகமானது இன்று விஞ்ஞான ரீதியில் எவ்வளவோ முன்னேறியிருப்பது உண்மை தான். ஆனால், மக்கள் நிம்மதியில்லாமல், மாநிலங்களிடையே, பல்வேறு நாடுகளிடையே போட்டி, கலவரங்கள், ஒருவருக்கு ஒருவர் ஆட்சி செய்ய முற்படுவது போன்ற காரணங்களால் பதட்டமும், டென்ஷனுமாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. சாதாரணமாக ஜலதோஷத்தை…

கத்திரிக்காய்

உடல் நலத்தை பாதுக்காக்கும் கத்திரிக்காயின் மருத்துவ குணங்கள் :- கத்திரிக்காய் இல்லாமல் தென்னாட்டு சமையலே இருக்காது என்னும் வகையில் சாம்பார், பொரியல், மசியல் என்று பல உணவு வகைகளில் கத்தரிக்காய் தவறாமல் இடம் பெற்றிருக்கும். உணவாகப் பயன்படும் கத்திரிக்காயின் மருத்துவ குணங்களை மிக விரிவாக நம் முன்னோர்களும் சொல்லியுள்ளனர்.…

ஆண்டி செப்டிக் பிறந்த கதை

பதிமூணு வயது சிறுமிக்கு பாடம் சொல்லிக் கொடுக்க சென்றிருந்தேன். அவள் முட்டியில் சரியான சிராய்ப்பு. காய்ந்திருந்தது. அவள் அம்மாவிடம் அடிப்படை கேள்வி கேட்டேன். “டெட்டால் போட்டீங்களா” “ஒரு பச்சிலை சாற பிழிஞ்சி விட்டேன்” என்றார். ஆச்சரியமாக இருந்தது. டெட்டால் மேல் அவருக்கு அவ்வளவு வெறுப்பு இருக்கிறது. காரணம் நம்ம…

நவீன மருத்துவத்திற்கும் அக்குபங்சருக்கும் உள்ள வேறுபாடு

நவீன மருத்துவத்திற்கும் அக்குபங்சருக்கும் உள்ள வேறுபாடு.💐 ஆங்கில மருத்துவத்திற்கும், அக்குபங்சருக்கும் ஒரு போதும் சம்பந்தமே கிடையாது. இரண்டுமே வெவ்வேறு திசையில் பயணிக்கிறது, ஆங்கில மருத்துவம் ஸ்கேன் மற்றும் மருந்து பொருள் வகை சார்ந்த மருத்துவம். அக்குபங்சர் பிரபஞ்ச சக்தி (அருள்)வகை சார்ந்த மருத்துவம். ஆங்கில மருத்துவம் பரு உடலை…