1. Home
  2. முதுகுளத்துார்

Category: முதுகுளத்துார்

சமையல் செய்தபோது உடலில் தீப்பற்றி பள்ளி மாணவி சாவு

முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் போலீஸ் சரகத்தில் சமையல் செய்தபோது உடலில் தீப்பற்றியதில் காயமடைந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தார். முதுகுளத்தூர் அருகே கே.ஆர். பட்டணத்தைச் சேர்ந்த சோலைப்பன் மகள் மதுமிதா (16). திருவரங்கம் தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மதுமிதா…

சிலம்பாட்டம், கம்பு ஊன்றி தாண்டுதல்: முதுகுளத்தூர் மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்  சிலம்பாட்டம், கம்பு ஊன்றித் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்  ஆகிய 3 மாவட்ட பள்ளிகள் கலந்து கொண்ட மண்டல அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தென்கரை மௌன்ட்…

முதுகுளத்தூர் பகுதியில் பருவமழை பொய்த்ததால் கரிமூட்ட தொழிலுக்கு மாறிய விவசாயிகள்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் பகுதியில் பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் கரிமூட்ட தொழிலுக்கு மாறியுள்ளனர். முதுகுளத்தூர், கடலாடி  தாலுகா பகுதியில் உள்ள பூக்குளம், இளஞ்செம்பூர், ஆப்பனூர், ஏனாதி, ஒருவானேந்தல், நெடுங்குளம், கிடாத்திருக்கை, சித்திரங்குடி, காக்கூர், பொதிகுளம், புளியங்குடி, கீழத்தூவல், புனவாசல், ஓரிவயல், கோட்டையேந்தல் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயமே பிரதான…

மாநில போட்டிக்கு முதுகுளத்தூர் மாணவர் தகுதி

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர் கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்ட பள்ளி மாணவர்களுக்கிடையேயான  போட்டிகள் கடந்த 25, 26 ஆகிய தேதிகிள் சிவகங்கை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்றன. இதில் 17 வயதிற்குள்பட்டோர்…

அழிவின் விளிம்பில் பறவைகள் சரணாலயம்

முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் பராமரிப்பின்றி அழிவின் விளிம்பில் உள்ளது.தமிழகத்தில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயங்களில் ஒன்று சித்திரங்குடி பறவைகள் சரணாலயம். சித்திரங்குடி கண்மாய்க்கு 9 ஆண்டுகளாக பிரதான ஆற்று படுகைகளில் இருந்து தண்ணீர் வரத்து இல்லை. போதிய பருவமழை இல்லாததால் கண்மாயில் தண்ணீர் தேங்கவில்லை. இதனால், இங்கு…

மருந்து கடை தொழிலாளி கொலை: மேலும் மூவர் கைது

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மருந்துகடை தொழிலாளி கொலையில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். முதுகுளத்துார் அருகே வெண்ணீர்வாய்க்காலை சேர்ந்தவர் சிவக்குமார், 37. முதுகுளத்துாரில் தனியார் மருந்து கடையில் வேலை செய்தார். அக்.,13 ல் வேலை முடித்து தனது சொந்த ஊரான வெண்ணீர்வாய்க்காலுக்கு டூவீலரில் சென்ற போது காரில்…

மருத்துவ முகாம்

முதுகுளத்துார் அருகே சாம்பக்குளத்தில் கீழத்துாவல் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி தலைமை வகித்தார். இளைஞரணி துணை செயலாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க தலைவர் அழகர்சாமி முன்னிலை வகித்தனர். கர்ப்பிணிகள், இருதய கோளாறு, கண், காது, மூக்கு, தொண்டை, பொது…

ஊருக்கு வினியோகிக்க காவிரி குடிநீர்…இல்லை தாராளமாகப் பாயுது வயல்வெளிகளில்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பகுதியில் ஊர்களுக்கு வினியோகிக்க காவிரி குடிநீர் இல்லையாம். ரோட்டோர ‘ஏர்வால்வு’ தொட்டிகள் நிரம்பி வயல்வெளிகளில் தாராளமாக பாய்கிறது. ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்கும் வகையில் 616 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டம் செயல்படுத்தப்பட்ட காலம் முதல் முதுகுளத்துார்,…

பரமக்குடி கல்வி மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

முதுகுளத்தூரில் பரமக்குடி கல்வி மாவட்ட அளவிலான 14,17,19 வயதிற்குள்பட்ட மாணவர்களுக்கான எறிபந்து, கால்பந்து, சைக்கிள் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற எறிபந்து போட்டியை பள்ளித் தாளாளர் சந்திரசேகரன் தொடக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.பிரசாத், தலைமை ஆசிரியை டி.ஆர்.ஆட்லின் லீமா, மாவட்ட…

முதுகுளத்தூர் வர்த்தக சங்க செயற்குழு கூட்டம்

முதுகுளத்தூர் நகர் வர்த்தக சங்க செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வர்த்தக சங்கத் தலைவர் வி.கருப்புச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் எம்.செய்யது அப்தாஹிர், பொருளாளர் எஸ்.முத்துராமலிங்கம், துணைத் தலைவர் பி.ராமபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   தமிழக மக்களுக்கு காவிரி நீர் வழங்காத கர்நாடக அரசைக் கண்டித்தும், உச்ச…