-
News
-
January 18, 2018
சிறுகதை அலுவலகத்தில் அன்று வரதனுக்கு இறுதிநாள். இன்னும் சில நாட்களில் துபாயில் வேலைக்குசேரவிருக்கிறான். கல்யாணமாகி இரண்டு வருடத்திற்கு பிறகு குழந்தை பிறந்து நாலு மாதம் தான்ஆகிறது. மனைவியையும், மகனையும் பிரிந்து செல்ல அவனுக்கு மனசு இல்லை. ஆனால் என்ன செய்வது வாங்குற சம்பளம்,தங்குறதுக்கும், தின்கிறதுக்குமே சரியாய் இருந்தது. இப்பொழுது மகன் பிறந்திருக்கிறான். இனியும் இப்படி சமாளிக்கமுடியாது. அவனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பனும். நிறைய படிக்க வைக்கணும் அதுக்கு பணம் வேணுமே. இன்றையதேதியில் ஒரு குழந்தையை படிக்கவைக்க பெற்றோர் இருவரும் வேலைக்கு போனால் தானே சமாளிக்கமுடிகிறது. ஒருவழியாய் துபாய்க்கு ஆள் எடுக்கும் ஒரு கம்பெனியில் லட்ச ரூபாய் பணத்தைக் கட்டி வேலையும் உறுதியாகி விட்டது. வெளிநாடு போய் சம்பாதித்து விரைவிலேயே வாங்கிய கடனை அடைத்திவிடலாம். சிறிது காலம் வேலை பார்த்து சிறுகச்சிறுக சம்பாதித்து ஒரு வீட்டைக் கட்டிவிட்டு ஊரிலேயே ஒரு தொழிலை தொடங்கினால் அப்படியே காலம் ஓடிவிடும் எனபெரும்பாலானோர் போல வரதனும் விமானத்தில் கனாக் கண்டுகொண்டே துபாய்க்கு பயணித்தான். விமானத்தில் ஏறியதிலிருந்து, விமான நிலையத்தில் அழுகையோடு வழியனுப்பி வைத்த மனைவியின் முகமும், கட்டிக்கொண்டு விடமாட்டேன் என்று அழுது அடம்பிடித்த மகனின் முகமும், விமானத்தில் வரதனைப்…