1. Home
  2. இலக்கியம்

Category: சிறுகதைகள்

அமைதி

#குட்டி_கதை #அமைதி நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை…

நண்பனா? எதிரியா?

நண்பனா? எதிரியா? முடிவு செய் சிறு கதை அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும்…

கமலா எப்போது உண்மையை உணர்வாளோ?

கமலா எப்போது உண்மையை உணர்வாளோ?(சிறுகதை) இந்த ஆம்பள பசங்களே இப்படித்தான், பொறுப்பில்லாதவனுகனு திட்டிக்கொண்டே சமையலறையில் இருந்து வெளியில் வந்த கமலா கையில் இருந்த டீ கோப்பையை தனது கணவன் குமாரிடம் நீட்டினாள். மனைவியின் கோபத்திற்கான காரணம் என்னவென்று புரியாமல், யார் பொறுப்பில்லாமல் இருக்கா? நீ யாரை பேசுறானு? குமார்…

சிற்றிதழ்: சிறுகதை

சிற்றிதழ்: சிறுகதை எஸ்.ராமகிருஷ்ணன் கதவைத் தட்டும்போது அப்படி யொரு குரல் கேட்கும் என்று நாங்கள் நினைத்துகூடப் பார்க்கவில்லை. தயங்கிய படியே வாசலில் நின்றிருந்தோம்.  மதியம் 3.30 மணியிருக்கும். வீதியில் ஆள் நடமாட்டமே இல்லை.  தபால் அலுவலகத்தை யொட்டிய சிறிய வீதி அது. “வாசல்ல எந்த நாயோ வந்து கதவைத்…

தகுதி

16-05-2018 தேதியிட்ட “குமுதம்” வார இதழில் வெளியான, ஒருபக்கக் கதை தலைப்பு: தகுதி எழுதியவர்: கவி. முருகபாரதி _____________________________ கண்ணாடியில் முகம் பார்த்தான் மணி. இன்று அவனுக்கு நேர்முகத் தேர்வு. “கேடலோனியா எங்குள்ளது?” – முதல் கேள்வி. “அது ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கில் உள்ள தன்னாட்சிப் பகுதி.” “குட்..! அமெரிக்காவைக்…

பெயரில் என்னமோ இருக்கு! (சிறுகதை)

பெயரில் என்னமோ இருக்கு! (சிறுகதை) தன் சிநேகிதி வீட்டுக்குப் போய் திரும்பிய கமலம் படபடத்தாள்: “யோசிக்காம,  கன்னாபின்னான்னு பேர் வெச்சா இப்படித்தான் ஆகும்!” புத்தகத்தில் ஆழ்ந்திருந்த ரேணுகா நிமிர்ந்தாள். எதுவும் கேட்கவில்லை. அம்மா தானே சொல்வாள் என்று காத்திருந்தாள். “மீனாட்சியோட பொண் வயத்துப் பேரனுக்கு துருவன்னு பேரு வெச்சா. ஸ்டைலா கூப்பிடறது த்ருவ். இப்போ என்ன…

ஒரு நிமிடக் கதை: அம்மா

ஒரு நிமிடக் கதை: அம்மா வாயில் டூத் பிரஷ்ஷுடன் வாசலில் கிடக்கும் செய்தித்தாளை எடுக்க வந்தான் சங்கர். “என்ன சங்கர் சார், ரெண்டு நாளா வீட்ல யாரும் இல்லையா என்ன?… வீடு மூடியே இருந்துச்சே?… சொல்லிக்காம எங்க போயிட்டிங்க?” செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு செல்வம்…

சிறுகதை – வெள்ளாயி

சிறுகதை – வெள்ளாயி   நார்க் கட்டில் முதுகில் சுருக் சுருக்கென குத்தினாலும் இதமாய்  தான் இருந்தது. துண்டை விரித்துபோட்டு  தலைக்கு கையை வைத்துப் படுத்து, தலைக்கு மேல் பச்சைப் போர்வையில் துளித்துளியாய் மஞ்சள் நிறத்தில் முத்து கோர்த்தது போல காற்றில் அலைந்து கொண்டிருந்த  வேப்பம்பழங்களை பார்த்துக்கொண்டே முன்னர்…

அன்பு

“அன்பு” ஒரு மனிதர் சாலை ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் இன்னொரு நபர் மீது இடித்துவிட்டார். ஐயோ… தெரியாமல் இடித்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று இவர் சொல்ல, பரவாயில்லை என்று அவர் சொல்ல இருவருமே கண்ணியத்துடனும் புன்னகையுடனும் விடைபெற்றார்கள். அவர்களிடையே மனஸ்தாபத்துக்கான காரணமில்லாமல் போயிற்று. அன்று அவர்…

இஃப்தார் பார்டி – சிறுகதை

இஃப்தார் பார்டி – சிறுகதை ஒரு பண்டிகை நாள் நெருங்குகிறதென்றால் அதற்கான எதிர்ப்பார்ப்புகளிலும் திட்டமிடுதலிலும் சிறுவா்கள் பெரியவா்களை விடகெட்டிக்காரா்களே… அடித்தட்டு துவங்கி மேல்மட்ட பிள்ளைகள் வரை அவரவரர் தம் வாழ்க்கை தரத்துக்கு ஏற்றவாறு அவா்களின் கனவுகள்வேறுபட்டிருக்கின்றது. ரஹீமா பெற்ற இரட்டையா்களும் தங்களுக்கான கனவுகளில் லயிப்புடன் ஈடுபட்டிருந்தனா். இன்னும் ஒரு வாரத்தில் ரமலான்துவங்குகிறது. 30 நாட்கள் நோன்புக்கும் பத்து காசு சம்பாதிக்கிறார் போல் ஏதாவது செய்திட வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்னபெருத்த திட்டங்களெல்லாம் இல்லை. ஆனால் ஏதோ ஒன்றை கட்டாயம் செய்திடனும் என்பது அவா்களின் எண்ண ஓட்டமாயிருந்தது. சிறுவா்கள் இருவரும் கைக்குழந்தையாய் இருக்கும் காலத்தில் அவா்களுடைய தகப்பனார் வெளிநாடு சென்றதாய் ரஹீமா சொல்லிவைத்திருக்கிறாள்.  மற்றபடி அந்த ஆடவனை பற்றிய உண்மையான விவரங்கள் யாவும் அவளுக்கும் படைத்தவனுக்குமானது ,  அதைபாலகன்களிருவரும் அறிந்திருக்க வாய்ப்புகளில்லை தான். சென்றவருட நோன்பு காலத்தில் பைசல் மாமா கடையில் உதவியாக நிற்ககூப்பிட்டிருந்தார். இரைட்டையா்கள் ஹசன், ஹுசைனும் ஒப்புக்கொண்டு சமோசா, பஜ்ஜி பலகாரங்களை பார்சல் செய்துகொடுத்துக்கொண்டு பைசல் மாமா கடையில் வேலை செய்தார்கள். அந்த பெருநாளுக்கு இருவருக்கும் புதுத்துணி வாங்குமளவிற்குசம்பளம் கொடுத்திருந்தாா் பைசல். இந்த வருடம் அதே போல் அல்லது அதை விட சிறப்பான வேலை ஏதாவது செய்ய வேண்டும் என்பதுஹசனின் கனவு.  பெரிய கனவெல்லாம் ஒன்றுமில்லை போன வருடம் அவா்களிருவருக்கும் துணி எடுக்கும் அளவுக்கு காசு கிடைத்திருந்தது. இந்த வருடம்அம்மாவுக்கும் சோ்த்து ஒரு புடவை எடுத்துக்கொடுக்கனும் என்பது சின்னவா்களின் ஆசை. அவளும் வெகுநாட்களாக நல்லபுடவை ஒன்றுகூட வாங்கி அணிந்திடவில்லை. அக்கம்பக்கத்தார்களின் அலட்சியப்படுத்தும் ரேசன் புடவைகளை வாங்கி சேகரித்து வைத்துக்கொள்வாள்.விவரம் தெரிந்த நாள் முதல் பீடி சுற்றுவது ஒன்று தான் அவள் அறிந்திருந்த வாழ்வாதாரம். எப்பொழுதோ அத்தா இருக்கும் பொழுது வாங்கிகொடுத்ததாக நான்கு நல்ல புடவைகள் வைத்திருந்தாள். நல்ல நாள் பண்டிகை நாட்களுக்கு, விசேச வீடுகளுக்கு செல்லும்போது மட்டும்பத்திரப்படுத்தப்பட்ட புடவைகளில் இம்மா மிக அழகாக காட்சியளிப்பாள்.   ஹுசைனுக்கு தினமும் அம்மா இது மாதிரி அழகாக உடைஉடுத்த வேண்டும் என்ற ஆவல் உண்டு. ஆனால் அவள் அன்றாடம்  கிழிசல்களடந்த ரேசன் புடவைகளில் சாயமிழந்த புகைப்படம் போன்றேகாட்சியளிப்பாள். நோன்பு முப்பதுக்கும் பைசல் மாமாகிட்ட சமோசா, வடை, பஜ்ஜி எல்லாம் மொத்தமாக வாங்கி ஆளுக்கொரு பள்ளிவாசல் நுழைவுகளில்நின்று விற்பனை செய்யலாம், ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் தான் வேலை இருக்கும் போன வரும் சேகுசேன் அப்பாபலகாரங்கள் விற்றுக“கொண்டிருந்தார்  இப்போது அவரின் மவுத்துக்கு பிறகு ரெம்ப நாளாக அங்கு வேறு எவரும் கடை விரித்திடவில்லை.என்றான் ஹுசைன். யோசனை நல்லாதானிருக்கு, நமக்கென்றால் மாமாவும் காசு முன்னபின்ன வாங்கிக்கொள்வாா். எல்லாம் சரியா இருந்தா இந்த பெருநாள்சூப்பரா இருக்கும் என்றான் ஹசன். நோன்புக்கு முதல் நாள் மாலையில் ஊரெல்லாம் திருநாளாக அல்லோலப்பட ரஹீமா பீடி தட்டோடு மன்றாடிக்கொண்டிருந்தாள்.ஹுசைன் சில நேரங்களில் சொல்லுவான் ” ஏம்மா பீடி சுற்றுனா நோய் வருமாம், இந்த புகையிலை தூள் ரெம்ப கெடுதினு எங்க சயின்ஸ்டீச்சா் சொன்னாங்க என்பான்” ஆமா கெடுதி தான் என்று உப்புக்கு சப்பாணயாக பதிலுரைப்பாள். இரட்டை சிறுவா்கள் இருவரும்தங்களுடைய உண்டியல் காசை கொட்டி எண்ணத்துவங்கினா்.மொத்தமாக  நானூறு ரூபாய் இருந்தது, அட இருக்கிற காசுக்கு முதல் நாள் பலகாரங்களை வாங்குவோமுடா. ஒத்த ரூவா கம்மி பன்னி மாமா கிட்ட வாங்கிட்டு அந்த ஒரு ரூபாலாபத்துல வித்துருவோம். அடுத்த அடுத்த நாள் அதிகமா வாங்கி வித்துடலாம் என்றான் ஹசன். நோன்பின் முதல் நாளிலிருந்து கூட்டாளியிடமிருந்து வங்கிய சைக்கிளில் பலகாரங்கள் அடுக்கிய டிரேயை பொருத்தி வைத்துக்கொண்டுஆளுக்கொரு பள்ளிவாசல் நுழைவுகளில் ஆஜரானார்கள்.அல்ஹம்துலில்லாஹ்னு வியாபாரம் நடந்தது கிரக்கமும் தளா்வும்எல்லாருக்குமானது தான். எனினும் பெரியவாகள் பலர் கூட்டமாக கூடும்வேளையில் சிறிய மனிதனவன் பொருமையும் அனுசரிப்புடனும்மனிதர்களை அணுகுவது அவ்வளவு சுலபாக இருந்திடவில்லை . விற்பனை முடியும் தருணத்தில்  தங்களுக்கென்று நான்கைந்துபண்டங்களை எடுத்து வைத்துவிட்டு வியாபாரத்தை முழுமைப்படுத்திக்கொண்டார்கள். நோன்பின் இரண்டாவது வாரத்தில் மாலைப்பொழுதில் வியாபாரத்துக்கு போன 20 வது நிமிடத்திலே ஹுசைன் வியாபாரத்தைமுடித்துக்கொண்டு  ஹுசைன் தன் சகோதரன் இருக்குமிடத்திற்கு வந்தான். ஏன்டா இவ்வளவு சீக்கிரம் வித்திட்டியா, என்று வியப்புடன் தன் சகோதரனிடம் வினவினான் ஹசன். ஆமாம், அந்த பள்ளியை ஒட்டியிருக்கும் கல்யாண மண்டபத்தில் இன்னிக்கு ஏதோ அரசியல் கட்சி நிா்வாகி வருகிறாராம். இப்தார் பார்டி-னுநிறைய பேர் போட்டா எல்லாம் போட்டு  எம்மாம்பெரிய பிளக்ஸ் இருந்தது தெரியுமா, அங்க இருந்த அண்ணன்மாருங்க கேக் , பப்ஸ், ஜுஸ்என்று ஏராளமான பண்டம் பலகாரங்களை வாங்கி வச்சிருந்தாங்க , நீ பார்க்கலியே வாயை பொளந்திருப்ப, கடைசிய என்கிட்ட வந்து 200சமோசாவையும் எங்க கிட்ட கொடுத்திரு மொத்தமா காசு வாங்கிக்கனு சொன்னாங்க. ரெம்ப சந்தோசம்னு கொடுத்துட்டேன்.மேற்கொண்டும் வேணும் என்றாங்க. அதான் உன்னை கூப்பிட வந்தேன். வா சீக்கிரம் என்று ஹசனையும் அழைத்துக்கொண்டு போனான். அந்த பள்ளியின் நுழைவில் சில நிமிடங்களுக்கு முன்பு இருந்த சாந்தமான சூழ்நிலை குலைக்கப்பட்டிருந்தது, காதுகளை கிழிக்கும் தலைவா்வாழ்க. கோசங்களும் கொடிகளும் சூழ பெரிய காரில் வந்த அந்த வெள்ளை மனிதன் மண்டபத்திற்கு உள்ளே நுழைந்தார். கூட்டத்திற்கு அப்பால் தள்ளி இரண்டு வாலிபா்கள் பலகாரம் விற்கின்ற ஹுசைனுக்காக காத்திருந்தனா். அட என்னடா இவ்வளவு நேரம்.நாங்க எதிர்பார்த்தத விட கூட்டம் அதிகமா வரும் போல் தெரியுது. என்று ஹசன் கொண்டு வந்த பலகாரங்களையும் மொத்தமாகபெற்றுக்கொண்டாா்கள். அதன் பின் வாலிபா்களில் ஒருவன் சிறுவா்களை நோக்கி அடேய் தம்பிகளா எங்களிடத்தில் பாரிமாறுவதற்கு ஆள்குறையுது , ரெண்டு பேரும் வாரிங்களா ஆளுக்கு அம்பது ரூபா வாங்கிங்கடா என்றான். சின்னவா்களுக்கு சந்தோசம்  தான், சைக்கிளைஓரமாக நிறுத்திவிட்டு  இப்தார் நிகழ்ச்சியில்  பறிமாற தொடங்கினா். அந்த இப்தார் பார்டிக்கு சிறப்பு விருந்தினராக காரில் வந்திறங்கிய வெள்ளை மனிதன் உட்பட பிரபல்யமானதொரு சினிமா கதாநாயகனுடன்சோ்த்து நான்கு பேர்  மேடையில் முதல் வரிசையில் வீற்றிருந்தனா். ஏன் அண்ணே இவரும் நோன்பு வச்சிருக்காரா என்று மாற்றுமத அரசியல் முக்கியப்புள்ளியான அந்த வெள்ளை மனிதனையும் சினிமாகாரரையும்  குறிப்பிட்டு கேட்டான்   ஹு சைன் வெள்ளந்தியாக. அடேய் நோன்பு திறப்பவரெல்லாம் நோன்பாளியாக இருக்க வேண்டியதில்ல. வாயை குறைச்சிட்டு வேலையை பாருங்க. எல்லாருக்கும்பரிமாறிட்டு நீங்களும் ஆளுக்கொரு  பிளேட் எடுத்துட்டு நோன்பு திறக்க உட்காந்திருங்க என்றான்  அவா்களை அழைத்து வந்த வாலிபன். இப்தார் வேளையில் நோன்பு திறந்து சிற்றுணவு உட்கொண்ட பின் மேடையில் இருந்த அந்த  வெள்ளை மனிதர்  பேச துவங்கினார் சில நயவஞ்சகா்களின் சூழ்ச்சியால ஆட்சி கயவா்களின் கைகளில் போய்விட்டது. நான் மட்டும் அதிகாரத்தில் இருந்திருந்தால் இந்தசமுதாயத்திற்கு அதை செய்திருப்பேன். இதை செய்திருப்பேன் என்று முகதத்திலே நவரசங்களையும் கொட்டி ஓர் சிற்றுரைஆற்றிமுடித்தார். சிறிது நேரத்தில் தொழுகையை முடித்துக்கொண்டு அந்த கூட்டம் கலையத்தொடங்கியது. இப்தார் நிகழ்வில் ஏகப்பட்ட பலகாரங்கள் மீந்து போய் சிதறடிக்கப்பட்டு  கிடந்தது. சில பெரிய மனிதர்களின் தட்டில் வைக்கப்பட்டஉணவுப்பொருட்கள் அப்படியே இருந்தது. ஆகாத சொந்தக்காரன் வீட்டுல முகத்தோச்சனைக்கு…