1. Home
  2. அதிரை கவியன்பன் கலாம்

Category: அதிரை கவியன்பன் கலாம்

வத்தி வைக்கும் வாட்ஸப் வதந்தீ!

எத்தி வைக்கும் செய்திகளை எளிதாக்க  உதவினாலும் வத்தி வைக்கும் வதந்தித்  தீயெ அதிகம்!   உண்மைகள் வீட்டிற்கு உள்ளே வருவதற்குள் பொய்மைகள் வாட்ஸப்பில் புறப்பட்டும்  பாரெங்கும்!   நிழற்படங்கள் யாவும் நிச்சயமாய்ப்  பிழைகள் உழலவைக்கும் மனங்களை உலைவைக்கும் குடும்பங்களை!   நாளும் செய்திகளை நலமாய்ப் பதிவோம் ஆளும் அறிவியலின்…

புழுதிக் காற்றே …..

அரபகத்தில் சென்ற வாரம் வீசிய புயற்மணலைக் கண்டு யான் எழுதிய கவிதை   புழுதிக் காற்றே என்று புலம்பிடவில்லை நாங்கள் அழுதுச் சாற்றவுமில்லை அவனே அறிவான்     ஆற்றல்மிக்க எங்களின் அயராத உழைப்புக்கு காற்றே நீ தானே தோற்றுப்போனாய்!     கரைகாணா எங்களின் கடின உழைப்பைக்…

வளைகுடா வாழ்க்கை

விசாயிருந்தால் மட்டுமே விசாரிக்கப்படுவார்!   திரும்ப்பிப் போவதாயிருந்தால் விரும்பிப் பழகப்படுவார்!   தோசைக்குள்ள மரியாதை அப்பத்துக்கும் இடியப்பத்துக்கும் இல்லை! ஆசையை அடக்கி வைத்து ஆகாயத்தில் பறப்பவனுக்கே பாசவலை!   வெள்ளைக் கைலியின் வெளுப்பு மஞ்சளாகு முன்பு முல்லைக் கொடி மனையாளை விட்டும் முந்திப் பயணமானிகினால் தான் அன்பு!  …

அன்பின் முகவரி அணைந்து விட்டது

அமரர் பி.எஸ்.ஏ காக்கா அவர்களுக்கான இரங்கற்பா   ஆயிர மாயிரம் பேர்கள்     ஆதர வாயினர் உம்மால் தாயினைப் போலவே அன்பால்     தாங்கியே சென்றவுன் பண்பால் வாயிலில் வந்தது செல்வம்     வாழ்வினைப் பெற்றனர் எங்கும் நோயினால் சென்றதுன் மெய்தான்    …

கவிதையும் கற்பனையும்

கற்பனை என்னும் கவின்விதை போட்டு அற்புதம் நிகழ்த்தும் அருமலர்ப் பூத்துச்  சொற்பதம் யாவும் சுந்தரக் கனியாம் கற்பதே ஈண்டுக் கவிதையாய்க் கனியும்! காதலி  காட்டும் கயல்விழி போதை ஆதவன் கதிரின் ஆளுமைப் பாதை மாதுளம் பழமாய் மனம்விழும் சொற்கள் பாதையைக் காட்டும்  பயணமைற் கற்கள்    வானகம் இடிக்க வண்ணமயில் ஆட்டம்  கானகக்   குயிலின் காற்றிசைப் பாட்டும்…

இலக்கு

இலக்கு..    எங்கே துவங்கி இங்குவந்தோம்  எங்கே துவங்கி இங்குவந்தோம்         என்ன தான்நாம் செய்கின்றோம் எங்கே சென்று முடிந்திடுவோம்         என்று தான்நாம் அறியாமல் எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம்          இலக்கே இல்லாப் பயணமாக இங்கே…

பிறை சொன்ன சேதி என்ன?

  http://youtu.be/kxLgcmFnp94?t=2m59s மறைகூறும் செய்திகளைப் பின்பற்ற ,,,,,மனிதகுலத்தில் முஸ்லிம்கள் ஆனோரே பிறைகூறும் செய்திகளாய்ப் பாவடிவில் ,,,,,பொழிகின்றேன் ஏற்பீரே தீனோரே!   இருளகற்றி ஒளிவீசி வானில்நான் …..இருந்துகொண்டு பேசுகின்றேன் மானிடரே! அருள்வசந்தம் சுமந்துகொண்டு உங்களிடம் ….அகத்தினுள்ளே நீக்குகின்றேன் மாஇடரே!   வரவேற்கக் காத்திருந்த நீங்களெல்லாம் …வாய்மையை மட்டுமுங்கள் வாய்களிலே உரமிட்டு…

சுற்றி எரிகிறது; சுந்தரத் தீவு……………!!

  சுற்றி எரிகிறது …சுந்தரத் தீவு நெற்றி வைத்து …நீளமாய்க் கேளு காலமும் காணாக் …காட்சித்தான் பின்ன பாலகர் செய்த … பாவம்தான் என்ன? கொடுமையிலும் கொடுமை …கொலைசெயுமிவ் வன்மை கடுமையுடன் தடுத்தால் …களைந்துவிடும் தீமை இறைவனின் கோபம் ….இவர்களைஅடையுமா? விரைவுடன் தீர்ப்பு …வந்திடவும்; மடிவர் இறுதிநாள் வருகைக்கு…

பெருமை

பெரிதினும் பெரிதாய்ப் பெருமிதம் கொள்வாய் அரிதினும் அரிதாய் அவனியில் வந்தாய்   வாய்ப்புகள் உனக்கு வழங்கியோன் யார்தான் வாய்களால் அவனை வழுத்தியே போற்று பெருமையும் புகழும் பெரியவன் பெற்றான் பெருமிதம் மிளிரப் பெரிதெனப் போற்று பெறுதலில் மிகவும் பெருமிதம் கொள்ள மறுதலித் திடாத மறுமொழி நன்றி உடலுடன் உளமும்…

அம்மா என்னும் அன்பை நேசி!

அம்மாவின் வியர்வையினால் வெந்த இட்லி ……அளித்திட்டச் சுவைக்குத்தான் ஈடும் உண்டோ? அம்மாவின்  வியர்வையினால் அனைத்தும் உண்டோம் ……அம்மாவின் அன்புநம்மை அணைக்கக் கண்டோம் அம்மாவின் அடக்கத்தைக் கண்டு தானே …..அடக்கமவள் அடக்கத்தைக் கேட்கும் தானே அம்மாவின் பண்புகண்டு பண்பு கூட ….. அவளுக்குப் பணிவிடையைச் செய்யும் தானே! அன்புக்கு முகவரியை…