1. Home
  2. இலக்கியம்

Category: கட்டுரைகள்

கேள்வி மற்றும் கலைஞரின் Thug Life பதில்கள்

கேள்வி மற்றும் கலைஞரின் Thug Life பதில்கள் கேள்வி: “அம்மையார் ஜெயலலிதா சென்னையில் அமர்ந்துகொண்டே காணொலிக் காட்சி மூலம் தமிழகமெங்கும் கட்டடங்களைத் திறந்து வைக்கிறாரே?” பதில் : ஸ்ரீரங்கத்தில் இருந்துகொண்டு சொர்க்கவாசலைத் திறந்துவிட்டோம் என்கிறார்களே… அதுபோல நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்! கேள்வி: “சட்டமன்றப் பேச்சுக்கும் பொதுக்கூட்டப் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?’’…

பாரதியிடம் கேட்டேன்!

பாரதியிடம் கேட்டேன்! தேடிச் சோறு நிதம் தின்று – பல சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம் வாடித் துன்பம் மிக உழன்று – பிறர் வாடப் பல செயல்கள் செய்து – நரை கூடிக் கிழப் பருவம் எய்தி – பின்பு கூற்றுக்கு இரையென மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே வீழ்வேன் என்று நினைத்தாயோ! ஆம்! பாரதியின் வாழ்க்கை வேடிக்கையானது அல்ல. வேகமானது விவேகமானது. சொல் புதிது! பொருள் புதிது! சுவை புதிது! சோதிமிக்க நவகவிதை என்று தன் கவிதைக்கு மகுடம் சூட்டிக் கொண்டவர். தாலாட்டுப் பாடல் நேற்று இரவு பாரதி என் கனவில் வந்தார். பல நாட்களாக என் மனத்தில் தேங்கிக் கிடந்த ஒரு கேள்வியைக் கேட்டேன்.’பல்வகைப் பாடல்களைப் பாடிய நீங்கள் தாலாட்டுப் பாணியில் ஒரு பாடலும் பாடவில்லையே ஏன்?’ அதற்குப் பாரதி சொன்ன பதில் என்னைப் பிரமிக்க வைத்தது. அடிமை இந்தியாவில் ஏற்கெனவே உறங்கிக் கிடக்கின்ற மக்களை உசுப்பி விடப் பிறந்தவன் இன்னும் உறங்க வைக்கின்ற தாலாட்டை நான் எப்படிப் பாடமுடியும்? அதனால்தான் திருப்பள்ளியெழுச்சி பாடினேன். ஆண்டவனையும் அரசனையும் துயில் எழுப்பப் பாடிய துறையை மாற்றி ஒரு நாடு துயில் எழவேண்டும் என்பதற்காகப் பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி பாடினேன். அதில் கூட ஒரு புதுமை செய்தேன். தாய்தான் குழந்தைகளை எழுப்புவாள். ஆனால் இங்கு, விடுதலை தவறிக் கெட்டு உறங்கிக் கொண்டிருந்த பாரதமாதா என்ற தாயை, விடுதலைக்குப் போராடும் தேசியத் தலைவர்கள் என்ற குழந்தைகள் எழுப்புவதாக அமைத்தேன். ‘மதலைகள் எழுப்பவும் தாய் துயில்வாயோ மாநிலம் பெற்றவள் இது உணராயோ’ – பாரதியின் விளக்கம் என்னைக் கவர்ந்தது. முரண்பாடு இன்னொரு கேள்வியும் கேட்டேன். பாரதி! நாய்பற்றிப் பாடியதில் குழப்பமும் முரண்பாடும் இருப்பது போல் தோன்றுகிறது. பாப்பா பாடலில் வாலைக் குழைத்து வரும் நாய்தான் மனிதருக்குக் தோழனடி என்று பாடிவிட்டு புதிய ஆத்திசூடியில் ஞமலி போல் வாழேல்; நாயைப்போல் வாழாதே என்று பாடியிருப்பது சரியா? எதை எடுத்துக் கொள்வது? அதற்குப் பாரதி விடை சொன்னார். இதில் முரண்பாடு ஏதுமில்லை. நாயினுடைய இரு வேறு நிலைப்பாடுகளை எடுத்துக் கூறியிருக்கிறேன். நன்றி உணர்ச்சிக்கு நாய் சிறந்த எடுத்துக்காட்டு. அதற்காக அதைப் போற்றலாம்.ஆனால் நாயிடம் இன்னொரு மோசமான குணம் உண்டு. அதுதான் அடிமைப் புத்தி. தனக்குச் சோறு போடுகிறவன் கொள்ளைக்காரனாக இருந்தாலும், கொலைகாரனாக இருந்தாலும் அவனுக்காகவும் நன்றி காட்டி வாலாட்டும். இந்த அடிமைத்தனத்தை நான் வெறுக்கிறேன். எனவே எனது பாடல்களில் அடிமைத்தனம்பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் நாயைப் பற்றிச் சொல்லியிருப்பதைப் பார்க்கலாம்.நன்றி உணர்ச்சிக்கு நாயைப் பின்பற்றுங்கள். அடிமைப் புத்தியில் அதைப் பின்பற்றாதீர்கள்’ என்று இருவேறு நிலைகளில் பாடியிருக்கிறேன்.” கம்பனுக்கு வந்த பெருமை கனவு கலைந்துவிட்டது. எனக்கும் தெளிவு ஏற்பட்டது. இந்த அடிப்படையில் பாரதியின் பாடல்களை ஆராயலாமோ என்று தோன்றியது. முதன்மையான தமிழ்ப் புலவர்களை வரிசைப்படுத்த வந்த பாரதி, “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவன் போல் இளங்கோ போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை” என்றார். வரிசை மாறிக் கிடக்கிறது. வரலாற்று வரிசையில் கடைசியில் வரவேண்டிய கம்பன் முதலில் வந்திருக்கிறான். இஃது ஏன்? இது தற்செயலாக அமைந்த வரிசையா? அல்லது பாரதி திட்டமிட்டு அமைத்த வரிசையா? இதுதான் ஆய்வுக்குரியது. இது தற்செயலாக நேர்ந்த வரிசை இல்லை. ஏனென்றால் தமிழ்நாட்டின் பெருமை பற்றி பாடவந்த பாரதி, “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்று கம்பனைத்தான் முதன்மைப்படுத்துகிறார். பிறகுதான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”…

பதற்றம் வேண்டாமே…!

“பதற்றம் வேண்டாமே…!” ………………………………………………….. சிலர் எப்போதாவது பதற்றம் அடைகின்றனர்; சிலர் எடுத்ததற்கு எல்லாம் பதற்றம் அடைகின்றனர். ஆக மொத்தத்தில் இந்த பயம், அச்சம், பதற்றம் ஆகியவை நம்மை கீழே இழுக்கும் சக்திகளாகவே எப்போதும் இருந்து வருகிறது. பயமான அல்லது இக்கட்டான சூழ்நிலைகளில் இருக்கும்போது, நாம் எல்லோருமே பதற்றம் (Anxiety)…

கீழக்கரை இன்குலாப்

இவர், ஆதிக்கத்துக்கு எதிராக ஆவேசக் குரலெழுப்பிய மக்கள் கவிஞன். காணும் காட்சிவெளிகளையும், தனிமனித அறங்களையும் மட்டுமே வர்ணனை செய்துவந்த கவிஞர்களுக்கு மத்தியில், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் உழைக்கும் மக்களுக்காகவும் எழுதுகோலில் புரட்சி மையை ஊற்றியவர். இந்தச் சமூகத்தில் எந்தெந்தப் பிரச்னைகளை எல்லாம் முற்போக்குவாதிகள் பேச மறந்தார்களோ, தயங்கினார்களோ அவற்றையெல்லாம் மக்களிடையே கொண்டுசேர்த்த…

வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதி…!

”வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதி…!” ……………………………………… பெரும்பாலனோர் கடினமான வேலை என்றாலும் ஏதோ கிடைத்த வேலையில் சேர்ந்து விடுகின்றார்கள். ஆனால்!, கடினமான வேலைகள்தான் உண்மையிலேயே நாம் யார் என்பதை நமக்கும், உலகிற்கும் அடையாளம் காட்டுகின்றன… அதன் மூலம் நம்முடைய தனித் திறன்கள் என்ன வென்று நமக்கும்…

சிரித்து மகிழ..

சிரித்து மகிழ..   🤣 டாக்டருக்கும் ஆக்டருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சுதான் கொல்லுவாங்க!   🤣 சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்? சிவகாசில காச கரியாக்க வழி சொல்வாங்க.. நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க!   🤣 FILE க்கும் PILE க்கும் என்ன வித்தியாசம்? FILE ல் உட்கார்ந்து பார்க்கணும். PILE க்கு…

மிரள வைக்கும் கிருமிகள், அவைகளின் தாக்கம்!

 மிரள வைக்கும் கிருமிகள், அவைகளின் தாக்கம்!  (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ் (ஓ ) உலகின் நம்பர் ஒன் நாடு என்று பீற்றிக் கொள்ளும் அமெரிக்கா ஜனாதிபதியின் மணி மகுடம் நவம்பர் 3ம் தேதி நடந்த தேர்தலில் உருண்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.அதற்கு முக்கிய காரணம் கொரானா என்ற…

கடல்

கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், “இந்தக் கடல் மாபெரும் திருடன்…!” கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற்கரையில் எழுதினார், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா…!” அதே…

சுயமுன்னேற்றம்

சுயமுன்னேற்றம்   — Dr Fajila Azad   நீங்கள் காதலித்திருக்கிறீர்களா..  ஆம் என்று சொல்லுமுன் யாரை என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். அதை தெரிந்து கொண்ட பின்பும் ஆம் என்று சொன்னால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். இல்லையென்றால்… its never late இப்போதே நேரம் தாழ்த்தாமல் காதலிக்க…

உதவி

பழ வியாபாரியிடம் வந்த ஒருவர் பழங்கள்என்ன விலை? என்று கேட்டார். வியாபாரி, வாழைப்பழம் கிலோ 20 ரூபாய் ஆப்பிள் 30ரூபாய் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது அங்கே ஒரு பெண்மணி வந்தார் அவரும் பழம் என்ன விலை? என்று கேட்க வியாபாரி வாழைப்பழம் கிலோ 5 ரூபாய் ஆப்பிள் கிலோ…