கல்வி
அலைகடல் போலவே நிலையிலா வாழ்விது விலையிலாப் பேர்தரும் கலைபொருள் கல்வியே! அறம்பொருள் இன்பமும் திறமுடன் ஈட்டலாம் மறைபொருள் விளங்கலாம் நெறிதரும் கல்வியால்! திரைகடல் ஓடியும் திரவியம் தேடலாம் நரைவரும் காலமும் கரையிலாக் கல்வியே! — அதிரை கவியன்பன் கலாம்,