பாலத்தில் இருந்து தவறி விழுந்து ஆசிரியர் சாவு

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே புல்லந்தையைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன்(37). முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார். தேரிருவேலியில் இருந்து கையகம் வழியாக பரமக்குடி செல்லும் தார் சாலையில் உள்ள பாலத்தின் மேல் அமர்ந்துள்ளார். அப்போது நிலைதடுமாறி பாலத்தில் இருந்து 15 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருதுபாண்டியன் பலியானார். தேரிருவேலி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஓம்ராஜா கொடுத்த புகாரின் பேரில் கடலாடி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்(பொ) வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

News

Read Previous

உங்கள் எம்.எல்.ஏ செல் எண் மெயில் ஐடி

Read Next

காவிரி குடிநீர் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

Leave a Reply

Your email address will not be published.