விருதுநகர் தந்த விருது

Vinkmag ad

விருதுநகர் தந்த விருது

 

சிவகாமி மைந்தனாய் சிறப்புடன் பிறந்திட்டாய்

செந்தமிழ் நாட்டுக்கு சீராக வந்திட்டாய்

நவவருடம் முதல்வராய் நல்லாட்சி செய்திட்டாய்

நடுநிலையாய் கோலோச்சி நலதிட்டம் பலதந்தாய்

தவவாழ்வு கொண்டுநீ தமிழ்நாட்டை புதுப்பித்தாய்

தன்னலம் சிறுதுமின்றி தமிழர்க்காய் உழைத்திட்டாய்

அவமானம் தந்தோரையும் அமைச்சராய் ஆக்கிட்டாய்

அரசியலின் புனிதத்தை ஆருயிராய் மதித்திட்டாய்

 

விருதுநகர் தந்திட்ட விருதாம்நீ எங்களுக்கு

விழுதாகி நிழல்கொடுத்தாய் தமிழ்நாட்டு மக்களுக்கு

கருப்புநிறத் தங்கம்நீ காண்போரின் விழிகளுக்கு

கன்னித்தமிழ் நாட்டினிலே இணையாரு உங்களுக்கு

அருங்கல்வி எனும்வரத்தை அனைவர்க்கும் தந்திட்டாய்

அரும்பசியை ஆற்றிடவே சத்துணவும் வழங்கிட்டாய்

பெருந்தலைவன் எனச்சொன்னால் பேரூலகில் நீதானே

பிறப்பெடுத்து மீண்டும்வா காத்திருக்கு விழிதானே.

 

கவிதையாக்கம்

                     கவிஞர்.இரா.புனிதன்

                          சென்னை

                     கைப்பேசி 9840682682    

News

Read Previous

ஜூலை 15 : பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள்

Read Next

ஹலால்-ஹராம்

Leave a Reply

Your email address will not be published.