விருதுநகர் தந்த விருது
விருதுநகர் தந்த விருது
சிவகாமி மைந்தனாய் சிறப்புடன் பிறந்திட்டாய்
செந்தமிழ் நாட்டுக்கு சீராக வந்திட்டாய்
நவவருடம் முதல்வராய் நல்லாட்சி செய்திட்டாய்
நடுநிலையாய் கோலோச்சி நலதிட்டம் பலதந்தாய்
தவவாழ்வு கொண்டுநீ தமிழ்நாட்டை புதுப்பித்தாய்
தன்னலம் சிறுதுமின்றி தமிழர்க்காய் உழைத்திட்டாய்
அவமானம் தந்தோரையும் அமைச்சராய் ஆக்கிட்டாய்
அரசியலின் புனிதத்தை ஆருயிராய் மதித்திட்டாய்
விருதுநகர் தந்திட்ட விருதாம்நீ எங்களுக்கு
விழுதாகி நிழல்கொடுத்தாய் தமிழ்நாட்டு மக்களுக்கு
கருப்புநிறத் தங்கம்நீ காண்போரின் விழிகளுக்கு
கன்னித்தமிழ் நாட்டினிலே இணையாரு உங்களுக்கு
அருங்கல்வி எனும்வரத்தை அனைவர்க்கும் தந்திட்டாய்
அரும்பசியை ஆற்றிடவே சத்துணவும் வழங்கிட்டாய்
பெருந்தலைவன் எனச்சொன்னால் பேரூலகில் நீதானே
பிறப்பெடுத்து மீண்டும்வா காத்திருக்கு விழிதானே.
கவிதையாக்கம்
கவிஞர்.இரா.புனிதன்
சென்னை
கைப்பேசி 9840682682