ரம்ஜான் வாழ்த்து கவிதை……
ரம்ஜான் வாழ்த்து கவிதை..
அன்பை பகிர்ந்திடு அறிவை பெருக்கிடு
அடிமை விலக்கிடு ஆதரவு தந்திடு
தன்னை உணர்ந்திடு தர்மம் செய்திடு
தகமை வளர்த்திடு தரணியில் உயர்ந்திடு
வன்மை தவிர்த்திடு வணங்கி மகிழ்ந்திடு
வறுமை போக்கிடு வளமாய் செய்திடு
உண்மை உரைத்திடு உள்ளம் களித்திடு
உழைத்து வாழ்ந்திடு உடலைக் காத்திடு
தொழுகை செய்திடு தோழமை வளர்த்திடு
தொடக்கம் இறையோடு தொடர்ந்து பணிந்திடு
முழுமை நோன்போடு முப்பது நாளோடு
முளைக்கும் மகிழ்வோடு முடித்து கொண்டாடு
அழுகையை மாற்றிடு அருட்கொடை பெற்றிடு
அடைக்கலம் அவனோடு அன்றாடம் இணைந்திடு
வழுக்கா வாழ்வோடு வருவான் உன்னோடு
வறுமை மக்களோடு வருவதை பகிர்ந்திடு
உண்மை உரைத்திடு உதயமுன் தொழுதிடு
உரியதை கொடுத்திடு உழைப்பினை மதித்திடு
கண்ணில் ஒளியோடு கடவுள் உன்னோடு
காட்சியைக் கண்டிடு கருணையைக் கொண்டிடு
விண்ணில் பிறையோடு வந்திடும் நோன்போடு
விரதம் கொண்டாடு விளைந்திடும் அருளோடு
மண்ணில் மகிழ்வோடு மலரும் அன்போடு
மனிதம் நோக்கோடு மாகுர்ஆன் படித்திடு !
-ப.கண்ணன்சேகர், திமிரி. பேச : 9894976159.