உள்ளமதைத் திருப்புங்கள் !

Vinkmag ad

உள்ளமதைத் திருப்புங்கள் !

          எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா

                     images (3)
       
          கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையெல்லாம் மனிதற்கு அரணாகின  – அவனோ
அழித்தான் எரித்தான் ஆனமட்டும் பயன்படுத்தி
முடித்தானே காட்டினை இன்று.
 
          தானாக வளர்ந்தமரம் தன்வாழ்வை மனிதனுக்காய்
          தானீந்து நிற்கின்ற தன்மையினை காணுகிறோம் 
          தானாக வளர்ந்தமரக் காட்டினிலே வளர்ந்துவிட்டு
          வீணாகக் காடழித்து விபரீதம் தேடுவதேன் !
 
          மாடுவெட்டி நிற்கின்றான் ஆடுவெட்டி நிற்கின்றான் 
          அத்தோடு நின்றிடாமால் அநேகமரம் வெட்டுகின்றான்
          மரம்வளர்க்கும் எண்ணமின்றி மரம்வெட்டி நின்றுவிடின்
          மாநிலத்தின் பசுமையெலாம் வாழ்விழந்தே போயிடுமே !
 
          நாட்டின்வளம் காடதனை நாமழித்து நின்றுவிடின்
          நல்லமழை பெய்வதனை நாம்பார்க்க முடியாது
          நீரில்லா வாழ்க்கைதனை யாருமெண்ண மாட்டார்கள்
          பாரில்மழை மழைவேண்டிமெனில் பாதுகாப்போம் காடதனை !
 
         சுவாசிக்கக் காற்றும் பசிபோக்க உணவும் 
         சுத்தமான இடமும் அத்தனையும் அவசியமே 
         சூழல்பற்றிப் பேசுகிறோம் சூழலைநாம் பார்ப்பதில்லை
         சூழல்நிலை மாசுபடின் வாழ்வுநிலை என்னாகும் !
 
          நகரமய மாக்கலினால் நம்சூழல் என்னாச்சு
          நச்சுத்தன்மை சூழலினை தன்வசமாய் வைத்திருக்கு
          பெருந்தெருக்கள் பேருந்து பெருமளவில் வந்தாச்சு
          அருந்திநிற்கும் குடிநீரும் அசுத்தமுடன் கலந்தாச்சு !
 
          மேல்நாட்டு வண்டியொடு கீழ்நாட்டு வண்டியுமாய்
          பாதையிலே விடும்புகையால் பலநோய்கள் வருகிறது
          கவனிப்பார் கவனிக்கா நிலையிவை இருந்துவிடின்
          கண்டிப்பாய் கஷ்டகாலம் காலனென வந்துநிற்கும் !
 
          இயற்கைவழி அத்தனையும் இலாபம்தரா எனவெண்ணி
          செயற்வழி கையாண்டு சேர்க்கின்றார் பலநோய்கள் 
          விளைகின்ற பயிரனைத்தும் வேகமாய் வளர்ந்தாலும்
          விரும்பியுண்ணும் யாவருக்கும் வில்லங்கம் விளைக்குதல்லோ !
 
          தொழிற்சாலைக் கழிவுகளால் தூய்மையுடை நீர்நிலைகள்
          அழுக்கேறி நிற்கையிலே அதைப்பருகும் மக்கள்தமை
          கணப்பொழுதும் நினையாமல் காசையெண்ணும் கயமையெனும்
          குணம்மாறி நின்றுவிடின் கொண்டிடுமே தூய்மையங்கு !
 
          மரம்வெட்ட நினைக்கின்றார் மரம்வளர்க்க  வாருங்கள்
          நிலம்காக்க நினைக்கின்றார் செயற்கைமுறை தவிருங்கள்
          உரமான வாழ்வினுக்காய் உள்ளமதைத் திருப்புங்கள் 

          தரமான நற்சூழல் தானமைக்க வந்திடுங்கள் !
                                            எம் . ஜெயராமசர்மா.
image1
       

 

News

Read Previous

தமிழ்ப்பேராய விருதுகள் – 2016

Read Next

பஃறுளியாறாய்….

Leave a Reply

Your email address will not be published.