முதுகுளத்தூர் தொகுதியில் 14 மனுக்கள் நிராகரிப்பு
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 29 மனுக்களில், சனிக்கிழமை 14 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்த வேட்பு மனுக்களை சனிக்கிழமை தேர்தல் அலுவலர் ராமையா பரிசீலனை செய்தார். அப்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் 11 பேரது மனுக்களும், 4 சுயேச்சை வேட்பாளர்களது மனுக்களும் என மொத்தம் 15 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
மீதமுள்ள 14 வேட்பாளர்களது மனுக்களில் குறைபாடுகள் இருந்ததால், அவை நிராகரிக்கப்பட்டதாக, தேர்தல் அலுவலர் ராமையா, துணைத் தேர்தல் அலுவலர் கே.கே. கோவிந்தன் ஆகியோர் தெரிவித்தனர்.