வாசிப்பும் சுவாசிப்பும்
வாசிப்பும் சுவாசிப்பும்
————————————
வாசிப்பு வழக்கமானால்
வாழ்வு சிறப்பாக அமையும்
வாசிப்பு காலத்தை அறிந்து கொள்ள
வாசிப்பு காலத்தை
கடந்து செல்ல
வாசிப்பு முந்தைய நினைவுகளை நினைவு கூற
வாசிப்பு நிகழ்கால நிஜத்தை அறிந்து கொள்ள
வாசிப்பு எதிர்காலத்தை உருவாக்க
புத்தகம் அறிவினை சேகரிக்கும் பெட்டகம்
மனதிற்கு அறிவினை கொண்டு சேர்க்கும் தேனீக்கள்
மனதிற்கும் புத்தகத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை
வாசிப்புக்கு மேலானது மறு வாசிப்பு
வாசிக்கும் தருணமோ அற்புதம்
முதன்முறை வாசிப்பு ஒரு அனுபவம்
மறுமுறை வாசிப்பு மற்றொரு அனுபவம்
வாசிப்பதால் மேடை பேச்சாளராகலாம்
வாசிப்பதால் கவிஞராகவும் முடியும்
தெளிந்த நல் அறிவு வாசிப்பினாலே
உயரிய நற்சிந்தனை வாசிப்பினாலே
உதவும் குணமும் உண்டாகும் வாசிப்பினாலே
உன்னையே நீ அறிவாய் தொடர் வாசிப்பினாலே
சுவாசித்தல் சுவாசமாகும்
வாசித்தலும் சுவாசமாகும்
வாசித்தலின் மகத்துவத்தை
வாரிசுகளுக்கு சொல்லி வளர்ப்போம்
வருங்கால இந்தியா வை வல்லரசாக மாற்ற
வாசிப்பு நல் வழிப்படுத்திடுமே
கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், வரலாறு
கவனமுடன் வாசிக்க சொல்லுங்கள்
புத்தகமோ சிறியதுதான்
கருத்துக்களோ மிக ஆழமானது
நாள்தோறும் வாசித்து அதற்கேற்ப
வாழ்ந்து வந்தால்
வாழ்வில் எந்நாளும் திருநாள்தான்.
வாசிங்க! வாசிங்க!! வாசிப்பை வளர்த்திடுங்க!!!
கி.ஜீவாஅசோகன்
9444428592