வாழ்வின் மகத்துவம்
வாழ்வின் மகத்துவம்
இரா சத்திக்கண்ணன்
——————————
உனக்காக காத்திருந்தபோதுதான்
இயற்கையை
இரசிக்கத் தொடங்கினேன்
உனைப்பார்த்த பின்புதான்
எனை அலங்கரிக்கத் தொடங்கினேன்
உனைப் பின்தொடரத்
தொடங்கியபோதுதான்
பயணத்தை தொடங்கினேன்
உன்னிடம் பேசத்தொடங்கிய பின்புதான்
மெல்லினச்சொற்களை
மனனம் செய்யத்தொடங்கினேன்
உன்னிடம் பழகத்தொடங்கிய
பின்புதான்
காலத்தைப்
போற்றத்தொடங்கினேன்
உன்னிடம் அன்புசெய்யத் தொடங்கியபின்புதான்
கவிதையைத் துதிக்கத் தொடங்கினேன்
உன்னுடன் வாழத் தொடங்கிய பின்புதான்
வாழ்வின் மகத்துவம்
அறியத் தொடங்கினேன்!