ஊனம்

Vinkmag ad

ஊனமுற்றோரை உதாசீனப்படுத்தும்

ஞானமற்ற மனிதா…!

நீயும் ஒரு நாளில் நிலத்தில்

சாயும் வேளையில்

உயிரும் போய்விடும்;

பெயரும் போய்விடும்..!

உடல் முழுதும் செயலற்று

கிடக்கும்;”ஊனமுற்ற”நிலையே

கிடைக்கும்….

வேதத்தைக் காணாத கண்கள்;

ஓதாத நாக்கு;பிடிக்காத கைகள்;

உள்ளத்தால் ஊனமுற்றவைகளே..

அகம்பாவம் நிறைந்ததால்,

அகம்- பாவத்தில் உறைந்ததால்;

சுகம் தேடும் உள்ளமே- சுவனத்து

சுகம் தேடவேயில்லையே…!!

கருவறையே உலகமென்று

கருதியே சயனித்திருந்தாய்,

ஓருலகில் வந்து உதிப்பாயென்று

ஒருபோதும் நினைக்காதது போலவே;

மறு உலகம் உண்டென்பதை

மறந்து விட்டாய் மனமே..!

இரணமும்; மரணமும்

இரகசியமாய்த் தான்

இறைவனும் வைத்து விட்டான்;

இரண்டையும் நோக்கியே

இரவும் பகலும் பயணிக்கின்றோம்……

இரணத்தின் முடிவு;

மரணத்தின் துவக்கம்

சென்ற நிமிடம்-

நின்று பேசியவர்கள்

சென்ற இடம் எங்கே?

சென்று பார்த்து வா;

நின்று விடும் கற்பனைகள் மெதுவா(க)

ஒன்றுமே யில்லாதிருந்த உன்னை

நன்றாக உருவமமைத்த இறைவனே

ஒன்றுமே யில்லாமல் உருக்குலைத்து- மீண்டும்

ஒன்று சேர்க்கும் நாளில் எழுப்புவான்

உண்மை இதுவென்று உணராத உள்ளமே

உண்மையிலே “ஊனமுற்றவை”………

— அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

சீனாவின் பாரம்பரிய விழா

Read Next

காதலர் தினம்

Leave a Reply

Your email address will not be published.