வறுமை!

Vinkmag ad

வறுமை!
——————
நெடுஞ்சாலை ஓரம் மரக்கிளையில் தொட்டில்
குறுகுறுத்த கண்களுடன் தேன்மழலைச் சிட்டோ
படுத்திருக்க தென்றலின் தாலாட்டில் தூக்கம்,
கொடுத்துவைத்த தூக்கம் தழுவத் தழுவ
மெதுவாய் விழிமூடும் வைரச் சிமிழ்தான்!
நறுந்தமிழ்த் தாயோ வயலில் ஒருகண்
மறுகண் குழந்தைமேல்  மாறிமாறிப் பார்ப்பாள்!
வறுமை கொடிதென் றுணர்.

மதுரை பாபாராஜ்

News

Read Previous

காதலர் தினம் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு!!

Read Next

தொழுகையில் மிளிரும் சமத்துவம்

Leave a Reply

Your email address will not be published.