மனிதம்!

Vinkmag ad
மனிதம்!

மனிதம்  மறைவது வேதனையே

மானுடம் தோற்பது பாதகமே1

மனிதம் காப்பது நம் கடமை

மானுடம் நோற்பது நம் பெருமை!

 

இறைவன் அளித்த இவ்வாழ்வில்

இறைபணி செய்தல் முறையன்றோ?

மனிதம் காப்பதும், மானுடம் நோற்பதும்

இறை பணி தன்னில் உயர்வன்றோ?

அன்பே அறிவென் றறிவோமே

அருளே இறையென் றுணர்வோமே

அன்பும் அருளும் இறையானால்

அதுவே மனிதனின் உயர்வாகும்!

 

மனிதனை மனிதனாய் மதிப்போமே

மானுடந் தனைநிதம் காப்போமே

இறைவன் அருளைப் பெறுவோமே

உலகினில் உயர்வாய் வாழ்வோமே!

அன்புடன்

என் வி சுப்பராமன்

 

 

 

 

 

 

N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai – 600101

Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok:  http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan

 

News

Read Previous

பாந்தவ்யம்

Read Next

நா காக்க

Leave a Reply

Your email address will not be published.