ஷார்ஜாவில் மன்சூர் சாருடன் மனம் விட்டுப் பேச …. கல கல சி(ரி)றப்பு நிகழ்ச்சி
ஷார்ஜாவில் மன்சூர் சாருடன் மனம் விட்டுப் பேச …. கல கல சி(ரி)றப்பு நிகழ்ச்சிஷார்ஜாவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், இலக்கிய ஆர்வலரும், மாணவக் கண்மணிகளின் நட்பின் சிகரமாக விளங்கி வரும் முனைவர் பேராசிரியர் கம்பம் பீ.மு. மன்சூர் சாருடன் மனம் விட்டுப் பேச என்ற சி(ரி)றப்பு நிகழ்ச்சி பிரபல கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆதரவுடன் நடைபெற இருக்கிறது.இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடம் 25 பேர் மட்டுமே அமரும் வசதி கொண்டது. எனவே முதலில் பதிவு செய்யும் 25 பேருக்கும் மட்டும் அனுமதி வழங்கப்படும்.நிகழ்ச்சி வரும் 23.01.2016 சனிக்கிழமை மாலை சரியாக 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற இருக்கிறது.நிகழ்ச்சி நடைபெறும் இடம் சார்ஜா மன்னர் பைசல் சாலையில் அமைந்துள்ளது. முன்பதிவு செய்பவர்களுக்கு இடம் குறித்த தகவல் மற்றும் விபரங்கள் தெரிவிக்கப்படும்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டிய தொடர்பு எண்கள்050 – 51 96 433 / 055 – 41 45 068