ரசம் அதிகமாக கொதிக்ககூடாது
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.*
காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.*
மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.*
கீரைகளை மூடிப்போட்டு
சமைக்கக்கூடாது.* காய்கறிகளை
ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.*
சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம்
பிழியக்கூடாது.* தக்காளியையும்,
வெங்காயத்தையும்ஒன்றாக
வதக்கக்கூடாது.* பிரிட்ஜில்
வாழைப்பழமும், உருளைக்கிழங்கும்
வைக்கக் கூடாது.* பெருங்காயம்
தாளிக்கும்
போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.*
தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு
அதிகமாக கொதிக்கக்கூடாது.*
குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ,
எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.*
குழம்போ, பொரியலோ, அடுப்பில்
இருக்கும்
போது கொத்தமல்லி இலையை
போடக்கூடாது…..சமையலில் செய்ய
வேண்டியவை….* மாவு பிசைந்தவுடனேயே
பூரி போட வேண்டும்.* புளி காய்ச்சலுக்கு,
புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.*
ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு
காய்ச்ச வேண்டும்.* போளிக்கு மாவு,
கிட்டத்தட்ட ஆறு மணிநேரம்
ஊறவேண்டும்.*குருமாவை இறக்கும்
போது, கரம் மசாலாவை சேர்க்க
வேண்டும்.* பச்சை கற்பூரம் டப்பாவில்,
நான்கு மிளகை போட்டு வைக்க
வேண்டும்.* குறைந்தது இரண்டு மணி
நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற
வேண்டும்.* வாழைப்பூவை, முதல் நாள்
இரவே நறுக்கி, தண்ணீரில் போட
வேண்டும்.* கடலை உருண்டைக்கு,
வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க
வேண்டும்.*வற்றல் குழம்பை, தாளித்த
எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க
விட வேண்டும்.