ரசம் அதிகமாக கொதிக்ககூடாது

Vinkmag ad

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.* 

காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.* 

மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.* 

கீரைகளை மூடிப்போட்டு 

சமைக்கக்கூடாது.* காய்கறிகளை 

ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.* 

சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் 

பிழியக்கூடாது.* தக்காளியையும், 

வெங்காயத்தையும்ஒன்றாக 

வதக்கக்கூடாது.* பிரிட்ஜில் 

வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் 

வைக்கக் கூடாது.* பெருங்காயம் 

தாளிக்கும் 

போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.* 

தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு 

அதிகமாக கொதிக்கக்கூடாது.* 

குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, 

எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.* 

குழம்போ, பொரியலோ, அடுப்பில் 

இருக்கும் 

போது கொத்தமல்லி இலையை 

போடக்கூடாது…..சமையலில் செய்ய 

வேண்டியவை….* மாவு பிசைந்தவுடனேயே 

பூரி போட வேண்டும்.* புளி காய்ச்சலுக்கு, 

புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.* 

ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு 

காய்ச்ச வேண்டும்.* போளிக்கு மாவு, 

கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் 

ஊறவேண்டும்.*குருமாவை இறக்கும் 

போது, கரம் மசாலாவை சேர்க்க 

வேண்டும்.* பச்சை கற்பூரம் டப்பாவில், 

நான்கு மிளகை போட்டு வைக்க 

வேண்டும்.* குறைந்தது இரண்டு மணி 

நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற 

வேண்டும்.* வாழைப்பூவை, முதல் நாள் 

இரவே நறுக்கி, தண்ணீரில் போட 

வேண்டும்.* கடலை உருண்டைக்கு, 

வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க 

வேண்டும்.*வற்றல் குழம்பை, தாளித்த 

எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க 

விட வேண்டும்.

News

Read Previous

‘ஸல்’ என்பதன் பொருள்

Read Next

எளிய தமிழில் CSS – மின்னூல்

Leave a Reply

Your email address will not be published.