பெண் தற்கொலை

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே வியாழக்கிழமை பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி லட்சுமி (50). இவரது மகள் கோமதியும் (25), அவரது கணவர் காளிமுத்துவும் குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கணவர் திட்டியதாக சில நாள்களுக்கு முன் ஊரில் இருந்த கோமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோமதியின் 3 வயது குழந்தை காளிமுத்துவிடம் மண்டபம் கிராமத்தில் இருந்தது.

இந்நிலையில் பேத்தியை பார்ப்பதற்காக சென்ற லட்சுமியை, காளிமுத்துவும் அவரது பெற்றோரும் திட்டி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லட்சுமி வியாழக்கிழமை தனது ஊருக்கு வந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டர். இதையடுத்து அவரது சடலத்தை முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் (பொ) ஜேசு விசாரித்து வருகிறார்.

News

Read Previous

முதுகுளத்தூர் அருகே தகராறில் ஈடுபட்டவர் கைது

Read Next

விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அஸ்ட்ரோசாட்

Leave a Reply

Your email address will not be published.