முதுகுளத்தூர் அருகே தகராறில் ஈடுபட்டவர் கைது

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே முன்விரோதம் காரணமாக தகராறு செய்தவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம் (58). இவர், தனது குடும்பத்துடன் தேவர்குறிச்சியில் வசித்து வருகிறார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த செல்வம் (40) என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை நீலமேகம் ஊரில் இருந்தபோது செல்வம் அவரை தகாத வார்த்தையால் திட்டி தாக்க முயற்சித்தாராம்.

இதுகுறித்து இளஞ்செம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதின்பேரில் செல்வம் மீது போலீஸார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

News

Read Previous

காதல்

Read Next

பெண் தற்கொலை

Leave a Reply

Your email address will not be published.