பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?

Vinkmag ad
தீபாவளி பண்டிகையின்போது பட் டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது தொடர்பாக மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண் ணப்பன் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து மாணவர்கள் உறுதி மொழி எடுக்குமாறும் அறிவுறுத்தி யுள்ளார். உறுதிமொழி விவரம்:
# பட்டாசுகளை கவனமாகவும் விபத்தில்லாமலும் வெடிப்போம்.

# பெரியவர்கள் உடனிருக்க பட்டாசுகளை வெடிப்போம்.
# பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல்    ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்வோம்.
# திறந்தவெளிகள் மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிப்போம்.
#இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.
#அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்ப்போம்.
#மருத்துவமனை, பள்ளிகள் முதலானவை அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.
#குடிசைகள் மற்றும் எளிதில் தீ பிடிக்கும் பொருட்கள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.
#ஒலியைக் குறைப்போம், செவியைக் காப்போம்.
#கொண்டாடுவோம், கொண் டாடுவோம், விபத்தில்லா தீபாவளி யைக்  கொண்டாடுவோம்.
மேற்கண்ட உறுதிமொழியை எடுக்குமாறு பள்ளி மாணவ-மாண விகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

News

Read Previous

உனக்குள் இறங்கி உன்னைத் தேடு.!..

Read Next

பேராசிரியர் முனைவர் பீ. மு. மன்சூர் அவர்களுடன் ஒரு சந்திப்பு !

Leave a Reply

Your email address will not be published.