முதுகுளத்தூரில் அதிமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில், அதிமுகவின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொதுக் கூட்டத்துக்கு, மாவட்ட கழகச் செயலர் ஆர். தர்மர் தலைமை வகித்தார். மக்களவைத் தொகுதி உறுப்பினர் அ. அன்வர்ராஜா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தர்ராஜன், சட்டப்பேரவை உறுப்பினர் எம். முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் கூட்டத்தில், அதிமுக கழக கொள்கை பரப்பு துணைச் செயலர் நாஞ்சில் சம்பத் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ். நிறைகுளத்தான், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எம். சுந்தரபாண்டியன், விவசாய அணி மாநில துணைத் தலைவர் வீ. கருப்புச்சாமி, மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலர் எஸ். சுந்தரமூர்த்தி நன்றி தெரிவித்தார்.