நன்றி

Vinkmag ad

நன்றி

அகமும் புறமும் ஒருங்கே மகிழ்ந்தால்

அங்கே வரும் சொல் நன்றிதான்!

எவரும் நமக்கே உதவி செய்தால்

ஏற்பதைக் காட்டும் இன்சொல் நன்றிதான்!

 

பிழையறக் கற்றவர் பேசிடும் பேச்சில்

முடிவுரை சொல் என்றும் நன்றிதான்!

பிறர்தரும் தயவில் எதுவும் நடந்தால்

வாய்மொழி வரும் வார்த்தை நன்றிதான்!

 

ஏழ்மையை விரட்ட சேவை புரிந்தால்

வாழ்த்தும் மனம் சொல்வது நன்றிதான்!

அறிவுக் கண்ணைத் திறந்திடச் செய்தால்

அடிமனம் சொல்வது என்றும் நன்றிதான்!

 

நல்லோர் இதயம் நாளும் சொல்லும்

நயமிகு வார்த்தை நன்றிதான்!

உள்ளோர் இல்லார் பாகுபாடின்றி

உள்ளத்திலிருந்து வருவது நன்றிதான்!    

காவிரிமைந்தன், அபுதாபி. 

News

Read Previous

கீழக்கரை சதக்கத்துல்லாஹ் அப்பா !

Read Next

தாய்மை

Leave a Reply

Your email address will not be published.