மனித மூளை …!

Vinkmag ad

மனித மூளை …!

எம். முகம்மது இஸ்மாயில், வழுத்தூர்

மனித மூளை இறைவன் நிர்மாணம் செய்த முதல் கம்ப்யூட்டர். ஒரு உடம்புக்கு மூளை என்பது ரிமோட் கண்ட்ரோல் மாதிரி; சில உடம்புகளுக்கு அதிகாரம் படைத்த ஒரு மாமியார் மாதிரி. நல்ல ஆரோக்கியமான ஒரு மனித மூளையின் எடை எவ்வளவு தெரியுமா? ஒரு கிலோ, 360 கிராம்.

பயன்படுத்துவதற்காக இறைவன் படைத்த மூளையை, ஒவ்வொரு மனிதனும் தன் மூளையை 7 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகிறான். விஞ்ஞானிகள் 12 சதவீத மூளையையும் பயன்படுத்துகிறார்கள். மீதி 88 சதவீத மூளையை பயன்படுத்தவே இல்லை. அதாவது உபயோகப்படுத்த தெரியவில்லை. மூளையில் உள்ள சாம்பல் நிற மடிப்புகளை வைத்தே ஒருவருடைய புத்திசாலித்தனம் அமைகிறது. அந்த மடிப்புகள் அடங்கிய பகுதிக்கு ‘செரிப்ரம்’ என்று பெயர். இது மூளையின் மூன்றில் இரண்டு பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது.

பிறந்த குழந்தையின் மூளை எவ்வளவு எடை இருக்கும்? 370 கிராமிலிருந்து 400 கிராம் வரை. குழந்தைக்கு ஒரு வயதாகும்போது அதே மூளையின் எடை இரண்டு மடங்கு அதிகரிக்கிறது.

மூளையின், நுட்பமான கோடிக்கணக்கான உயிரணுக்களால் ஆனது. இந்த நுண்ணிய நுட்பமான நியூரான்களால்தான் நாம் சிந்திக்கிறோம். ஒருத்தனை திட்டுகிறோம். சந்தோஷம் வந்தால் பாட்டு பாடுகிறோம். கோபம் வந்தால் முறைக்கிறோம். மூளை ஆராய்ச்சி மாநாட்டில் ஜெர்மனை சேர்ந்த டாக்டர் விலாண்டர் பேசியது, “மூளையின் எடைக்கும், புத்திசாலித்தனத்துகும் சம்பந்தமே இல்லை. புத்திசாலித்தனம் என்பது மூளைக்கு உள்ளே இருக்கும் மசாலாவில் தான் உள்ளது.” (மசாலா என்பது நியூரான்களின் அடர்த்தி) யாராவது கோபம் வந்து திட்டும் போது, “ஏண்டா உன்னோட மண்டையிலே மசாலா இல்லையா?” என்று சொல்வதை கேட்டிருக்கலாம். மூளைக்கு ஒரு நிமிடத்துக்கு 800 மில்லி ரத்தம் தேவைப்படுகிறது. இந்த ரத்த சப்ளை இடைவிடாமல் தொடர்ந்து இருந்துக்கொண்டே இருக்க வேண்டும். இதயத்திலிருந்து 15 வினாடிகள் மூளைக்கு ரத்தம் வரவில்லையென்றால் நாம் மயக்கம் போட்டு விழுந்து விடுவோம்.

மூளை நம் மண்டையோட்டுக்குள் எப்படி பாதுகாப்பாய் இருக்கிறது. என்றால், ஈரமாய் பழுப்பு நிறத்தோடு கொழ கொழப்பாய் இருக்கும் மூளை, ஒரு திரவத்தில் மிதந்து கொண்டே இருக்கிறது. இந்த திரவத்தின் பெயர் ‘ஸெரிப்னோ ஸ்மைனல் ப்ளூயிட்’ இந்த அதிசய திரவத்தை மூளை தனக்கு சப்ளையாகும் ரத்தத்திலிருந்தே தயாரித்துக் கொள்கிறது.

மூளையை குறுக்காக வெட்டிப் பார்த்தால் கோடிக்கணக்கான நியூரான்கள் அடங்கிய நரம்புக் கூட்டங்கள் இருக்கும். இதில் ஏன், எதற்கு, எப்படி, எல்லாம் இணைந்த ஒரே குழப்பம், எங்கே, எந்த சிந்தனை, எவ்வாறு செல்கிறது என்பது ஆச்சரியத்திலும் மகா ஆச்சரியம். இருந்தாலும் மூளை பிறப்பிக்கும் கட்டளைகள் அந்தந்த இடங்களுக்கு போய் சேர்ந்துவிடும். மூளைக்கு வலி கிடையாது. ஒரு மனிதன் உணர்வுடன் இருக்கும் போதே அவனுக்கு மூளை ஆப்ரேஷன் செய்ய முடியும். மூளை உணரும் வலியெல்லாம் உடம்பின் மற்ற பாகங்களிலிருந்து வரும் நரம்புகளின் செய்திகளைத்தான். மற்றபடி மூளையை கிள்ளினாலும் சரி, குண்டூசியால் குத்தினாலும் சரி அதுபாட்டுக்கு தேமேன்னு இருக்கும்.

தூக்கம் நமக்கு எப்படி வருகிறது? அந்த வேலையிலும் மூளைக்கு அபார பங்கு உண்டு. நாம் படுக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டது, கண்களில் இருந்து ஆப்டிக் நரம்பு மூலமாய் பினியல் சுரப்பிக்கு செய்தி போகும். உடனே பினியல் சுரப்பி மெலடோனின் என்ற ஹார்மோனை சுரக்க கண்கள் சொக்கிப்போக நாம் மெல்ல மெல்ல தூக்கத்துக்கும் விழுகிறோம்.

நாம் சிந்திக்கும் போது மூளைக்குள் என்னென்ன ரசாயன சங்கதிகள் நடக்கிறது என்பதை வெளிநாட்டு மூளை ஆராய்ச்சி வல்லுனர்கள் பல ஆண்டுகளாய் ஆராய்ந்து வருகிறார்கள். பதில்தான் இன்னமும் கிடைத்த பாடில்லை. மூளையின் கார்டெக்ஸ் பகுதிகள் சிந்தனையை தோற்றுவிக்கும் ஜெனரேட்டர்களாக இயங்குகின்றன. இது சமீபகால கண்டுபிடிப்பு.

மனம் என்பது என்ன? அது மூளைக்குள் இருக்கிறதா? இல்லை இதயத்திற்குள் இருக்கிறதா? கூட்டம் கூட்டமான நியூரான்களின் செயல்பாடுதான் மனம் என்கிறது சமீபகால ஆராய்ச்சி ரிப்போர்ட் ஒன்று. எது என்று இன்னும் முடிவாகவில்லை. படைப்பின் சூட்சுமம் இதுதானோ?

மூளைத்திறனை பயன்படுத்தி வித்தியாசமாய் நினைப்பவர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் தெரியுமா? ‘டைவர்ஜண்ட்’. மூளையை அதிகம் பாதிக்கும் வியாதியின் பெயர் ‘சிட்ஸோ ப்ரினீயா’ அது பைத்தியம் பிடிப்பதில் ஒரு வகை. இந்த வியாதியை குணப்படுத்த மாத்திரைகள் வந்துவிட்டன. மாத்திரையின் பெயர் ‘ஹாலோபெரிடால்’

மூளையின் ஒரு பகுதியான ‘பெர்னிக்’ ஏரியாவில் நம் ஞாபக சக்தியின் அரிய கிடங்கு இருக்கிறது. நாம் பிறந்ததிலிருந்து கற்றுக் கொள்ளும் வார்த்தைகள் இந்த பகுதியில்தான் சேமித்து வைக்கப்படுகின்றன. ஆண் – பெண் இருபாலரின் வித்தியாசமான நடவடிக்கைகள், உணர்ச்சிகளுக்கு காரணம் மூளையில் உள்ள ‘ஹப்போதாலமஸ்’ என்ற சங்கதிதான். மூளைக்கு இணையான கம்ப்யூட்டர் ஒன்றை மனிதன் கண்டுபிடிக்கும் காலத்தில் அவன் மரணத்தை வென்றவனாக இருப்பான் அல்லது உச்சபட்ச ஆயுள்காலம் 1000 வருஷமாக இருக்கும். அந்த காலத்தில் மணமக்களை வாழ்த்துபவர்களை ஆயிரம் ஆண்டு காலம் வாழ்க என்று வாழ்த்த வேண்டியிருக்கும்.

மூளைக்கு வயதாகிக் கொண்டே போகும்போது அதற்கு போக வேண்டிய ரத்தத்தின் அளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. இப்படி ரத்த சப்ளை குறைந்தால் என்ன ஆகும் தெரியுமா? வாழ்ந்த காலத்தில் நடந்த சம்பவங்கள், பழகிய முகங்கள் அத்தனையும் மறந்து போகும். இந்த வியாதிக்கு பெயர் ‘அல்சைபர்’ இந்த வியாதி வருவது அரிது. ஆயிரத்தில் ஒருவருக்கு சாத்தியம்.

மூளையைப் பற்றி கடைசியாக ஒரு கொசுறு செய்தி. வருஷா வருஷம் மனித மூளை தன் எடையில் ஒரு கிராம் வீதம் குறைந்து கொண்டே வருகிறது.

 

( நர்கிஸ் – செப்டம்பர் 2015 )

News

Read Previous

முதுமைக் காதல்

Read Next

கொலுசு

Leave a Reply

Your email address will not be published.