இளம் பெண் தற்கொலை
முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கை கிராமத்தில் வியாழக்கிழமை இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிடாத்திருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து மனைவி கோமதி (32). இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் ஊருக்கு அருகில் இருக்கும் மரத்தில் கோமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பேரையூர் காவல் நிலையத்தில் காளிமுத்து கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.