சுதந்திரம் எங்கே?
சுதந்திரம் எங்கே?
சுதந்திரத்தின்
சூத்திரம்
அடிமையின் பூட்டை
திறந்த திறவுகோல்
சுதந்திரம்
காற்று நுழையாத
வெற்றிடத்தில் கூட
வெற்றி வாகை ஆடியதுதான்
சுதந்திரம்
உண்மையான பண்பு
நம்மிடம் இல்லை
உழைப்பதற்கும் தெம்பு இல்லை
மனிதன் சுதந்திரத்தைத் தொலைத்துவிட்டான்
காசு பணம் துட்டுயென
தேசிய உணர்வோடு கூடிய
தேசபக்தி பாடலையும்
ஒளிபரப்ப மறந்துவிட்டது
தொலைக்காட்சி!
அன்னியனை விரட்ட
ஒன்று சேர்ந்தோம்
இன்று ஒவ்வொருவரும்
அந்நியன் ஆனோம்
சுதந்திரத்தைத் தொலைத்ததால்
கதர் சட்டை ஒன்றுதான் தன்
கடமையைச் செய்தது
கடமை செய்ய வேண்டிய
கதர் சட்டை
இன்று மேசையைத் தட்டுகிறது!
சுதந்திரத்தை விற்றுவிட்டு
சுதந்திரம் எங்கள் உயிரென
இளைஞர்கள் கண்ணில்
உதிரம் கொட்டியது
வறண்ட நிலம் கூட
ஈர நிலமாய் விளங்கியது
சுதந்திரக் காற்று பட்டவுடன்…
மரங்களை அழிக்க நினைப்பவனுக்கும்
சுதந்திர உணர்வை மறந்தவனுக்கும்
பிரம்மஹத்தி தோசம் பிடிக்கும்
பிரம்மஹத்தி தோசம் பிடிக்கும்
என்றும் அன்புடன்…
ஜெயராமன் ஆனந்தி
கீழப் பெரம்பலூர்
050 7258518