குடும்பம் ஒரு கதம்பம்
‘குடும்பம் ஒரு கதம்பம்’
‘பொண்டாட்டி தேவை’ என்றேன்
‘முந்தானை முடிச்சு’டன் வந்தாள்
மனைவி அமைவதெல்லாம்
‘இறைவன் கொடுத்த வரம்!’
இறைவன் கொடுத்துவிட்டான்
இனிய மனைவி ‘வரம்’ – என்
‘மனைவி ஒரு மந்திரி!’ – குடும்ப
வாழ்வில் ராஜதந்திரி! – என்
‘மனைவி ஒரு மாணிக்கம்!’ – இதை
சொல்ல இல்லை தயக்கம்!
‘மனைவி சொல்லே மந்திரம்!’
அல்ல அவளும் இயந்திரம்!
‘பொண்டாட்டி பொண்டாட்டிதான்!’
புரிந்துகொண்டால் சந்தோஷம்தான்!
‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்!’
பூப்போல அவளையும் பாத்துக்கணும்!
கலங்காமல் நாமும் பார்த்துக் கொண்டால்
களிப்புடன் அவளும் சொல்லிடுவாள்,
‘என் புருஷந்தான் எனக்கு மட்டும்தான்!’
அன்புடனும் நன்றியுடனும்
‘தமிழ்த்தேர்’ ஜியா
அஜ்மான் – அமீரகம்