அம்மன் கோயில்களில் பௌர்ணமி திருவிளக்குப் பூஜை

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே காத்தாகுளம் காளியம்மன் கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு, சனிக்கிழமை திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.

முதுகுளத்தூர் அருகே உள்ள காத்தாகுளம் காளியம்மன், அய்யனார் கோயில், கீழமானாங்கரை செம்புவத்தி அய்யனார் ஆகிய கோயில்களில் பௌர்ணமியை முன்னிட்டு, பெண்கள் திருவிளக்குப் பூஜைகளில் பங்கேற்றனர்.

இதையொட்டி, கோயில்களில் பல்வேறு அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. திருவிளக்குப் பூஜையின்போது, பெண்கள் பஜனை பாடல்களை பாடி அம்மனை வழிபட்டனர். பின்னர், கோயில்களில் அன்னதானம் நடைபெற்றது. இதேபோல், சாயல்குடி அருகில் காணிக்கூர் பாதாள காளியம்மன் கோயில், பிள்ளையார்குளம் பனையூர் அம்மன் கோயில்களிலும் பௌர்ணமியை முன்னிட்டு, திருவிளக்குப் பூஜைகள் நடத்தப்பட்டன.

News

Read Previous

மூலிகை வளம்

Read Next

ஊர்சுற்றிப் பறவை – நூல் வெளியீட்டு விழா

Leave a Reply

Your email address will not be published.