போரூர் ஏரியை காக்க மனித சங்கிலி போராட்டம்
போரூர் ஏரியை மீட்க, நம் தலைமுறைகளின் நீர் உரிமையை மீட்க, தனியாருக்கு தாரைவார்க்கப்படும் நம் வாழ்வுரிமைக்காக குரல் கொடுக்க, முதற்கட்டமாய் கைகோர்ப்போம்.
சாதி, மதம், கட்சி கடந்து கைகோர்க்க வாருங்கள். குழந்தைகள், பெரியவர், பெண்கள், வேலை செய்வோர், வணிகம் செய்வோர் என அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் கைகோர்ப்போம்.
தண்ணீரின் மீதான நம் உரிமை என்பது அடிப்படை உரிமை.. அதை இழக்க இயலாது..
இந்த ஏரி நமக்கு சொந்தமானது மட்டுமல்ல, சுற்றி இருக்கும் மரங்களுக்கும், பறவைகளுக்கும், சிறு உயிரிகளுக்கும் என அனைவருக்குமானது.. இதை இழப்பதை தடுப்பது நம் அனைவரின் கடமை… கைகோர்க்க வாருங்கள்
நாள் 25-ஜூலை-2015 சனிக்கிழமை மாலை 4 மணி
இடம்: குன்றத்தூர் சாலை, போரூர் சந்திப்பு ( சிக்னல்)
போரூர் ஏரியை காப்பது குறித்து சன் நியூஸ் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சி:
மே பதினேழு இயக்கம்,