மனித நேய மக்கள் கட்சி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
முதுகுளத்தூரில் மனிதநேய மக்கள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இம்முகாமினை, சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா தொடங்கி வைத்துப் பேசினார். கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் முகம்மது இக்பால், முன்னாள் ஒன்றியத் தலைவர் வாவா ராவுத்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.